முகப்பு
சாலையில் சறுக்கிய பைக் காதலன் மடியில் பிரிந்த காதலி உயிர் ..! சாலைக்குழி.. மணலால்..விபரீதம்
Jun 28, 2025 01:27 PM
316
சார் , அவ என் மடியிலேயே இறந்துட்டா - காதலன் காதலிக்கு ஏன் ஹெல்மெட் போடலை ? போலீஸ்
காதலனுடன் பின்னால் அமர்ந்து பயணித்த இளம் பெண் சாலையில் விழுந்து பலியான நிலையில் உறவினர்கள் கதறி அழும் சோக காட்சிகள் தான் இவை..!
சென்னை தாம்பரம் அருகே ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் காமேஷ் . இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். தனது வீட்டின் அருகே வசித்து வரும் நிஷா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. நிஷா இருங்காடு கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த ஐந்து வருடத்திற்கு மேலாக உயிருக்கு உயிராக காதலித்து வந்த இந்த காதல் ஜோடி சனிக்கிழமை காலையில் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து பைக்கில் புறப்பட்டுள்ளனர். ஆனால் வேலைக்கு செல்லாமல் கோவளம் கடற்கரையை நோக்கி , இருசக்கர வாகனத்தை திருப்பி உள்ளனர். பைக்கில் வண்டலூர்-கேளம்பாக்கம் வழியாக சென்றதாக கூறப்படுகின்றது.
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே காங்கிரீட் சாலையில் சில இடங்கள் பெயர்ந்து கம்பிகள் தெரியும் அளவுக்கு ஆபத்தானதாக இருந்துள்ளது. இந்த கம்பிகளுக்கு இடையே பைக் சக்கரம் சிக்கியதால் நிலை தடுமாறியுள்ளனர். அத்தோடு அருகில் சென்ர பைக் மீது மோதாமல் இருக்க சாலையோரம் பைக்கை திருப்பி இருக்கிறார் காமேஷ்.
அப்போது சாலையோரம் கிடந்த மணலில் பைக் சறுக்கியது. இதில் சென்ற காதல் ஜோடி இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். காமேஷ் தலைக்கவசம் அணிந்திருந்த நிலையில் , பின்னால் அமர்ந்திருந்த நிஷா தலைக்கவசம் அணியாத்தால் அவரது பின்னதலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்தார். இதனை கண்டு பதறிபோன காமேஷ், நிஷாவை தூக்கி தனது மடியில் வைத்து தண்ணீர் கொடுத்த அடுத்த சில வினாடிகளில் காதலன் மடியிலேயே நிஷா பரிதாபமாக உயிரிழந்தார்.
அதன் பின்னர் இதுகுறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார் நிஷாவின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . தங்கள் மகள் உயிரிழந்த தகவல் அறிந்து குடும்பத்தினர் கதறி அழுதனர்
காதலனிடம் நடத்திய விசாரணையில் நிஷா தலைக்கவசம் அணியாததால் பின் மண்டையில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்ததாக கூறிய போலீசார், காமேஷிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை என்றும் தெரிவித்தனர். இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்றும் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டக்கூடாது என்றும் பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ள நிலையில் சாலையை விதியை மீறியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் இது போன்ற பிரதான சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகள் மற்றும் சாலை ஓரங்களில் படிந்திருக்கும் மணல் குவியலை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் ஆதங்கமாக உள்ளது
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu