RECENT NEWS

இஸ்கான் உணவகத்தில் அசைவம் சாப்பிட்டதால் சர்ச்சை.. வித்தியாச எதிர்ப்பு தெரிவித்த 
கிருஷ்ண பக்தர்கள்..!

BIG STORIES

"என் மனைவியை விமர்சித்தால் கோபம் வராதா?".. இராமதாஸ் பேசுவது அத்தனையும் பொய்.. நிர்வாகிகளிடம் வெடித்த அன்புமணி!

Jun 29, 2025 01:17 AM

138

"என் மனைவியை விமர்சித்தால் கோபம் வராதா?".. இராமதாஸ் பேசுவது அத்தனையும் பொய்.. நிர்வாகிகளிடம் வெடித்த அன்புமணி!

சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற பாமகவின் சமூக ஊடகப் பிரிவு கூட்டத்தில் பேசிய அன்புமணி, தனது தந்தையும் கட்சியின் நிறுவனறுமான ராமதாஸ் மீதான ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார். பேட்டிகளின்போது ராமதாஸ் பேசுவது அத்தனையும் பொய் எனக் கூறியுள்ள அன்புமணி, பெற்ற மகனையும் மருமகளையும் குறித்து நேரலை பேட்டியில் பேசலாமா என ராமதாசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பாமகவினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசத் தொடங்கிய அன்புமணி, கடந்த இரண்டு மாதங்களாகவே மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாகக் கூறினார்.

தினமும் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், "உங்கள் மனைவியை யாராவது திட்டினால் உங்களுக்கு கோபம் வராதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது பேட்டிகளில் பேசுவது அத்தனையும் பொய் எனக் கூறிய அன்புமணி, பெற்ற மகனையும் வீட்டுக்கு வந்த மருமகளையும் யாராவது ஊரின் முன்னாள் நேரலையில் பேசுவார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

கொள்ளையடிப்பவனுக்கும் கொலை செய்பவனுக்கும் ராமதாஸ் பொறுப்புகள் வழங்குவதாகக் கூறிய அன்புமணி, அவரைச் சுற்றி 3 தீய சக்திகள் இருப்பதாகவும் கூறினார்.

பொறுப்பு கொடுக்கிறேன் என கொலை செய்பவனையும், காவல்துறை தேடுபவனையும், கொள்ளையடிப்பவனையும் பாமகவிற்குள் ராமதாஸ் கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் இவை எதுவுமே ராமதாஸின் சிந்தனையில் நடைபெறுவது அல்ல என்றும் அன்புமணி கூறினார்.

ராமதாஸ் சொல்லித் தான் 2024ல் பாஜகவுடன் கூட்டணி பேசியதாகக் கூறிய அன்புமணி, அவர் அப்போதே சொல்லி இருந்தால் அதிமுக கூட்டணியை தாம் வேண்டாம் என்றா சொல்லி இருப்பேன் என்றார்.

கூட்டணி வைத்துக் கொள்ள பாஜக யார் தனக்கு மாமனா, மச்சானா என்றும் கேள்வி எழுப்பினார். வயது முதிர்வு காரணமாக ராமதாஸ் குழந்தை போல் மாறிவிட்டார் என்றும் அதனால் அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்றும் அன்புமணி கேட்டுக் கொண்டார்.

கடந்த 5 ஆண்டுகளாகவே ஐயா ஐயாவாக இல்லை என்று கூறிய அன்புமணி, அவர் அவராக இருந்து எதைச் சொல்லி இருந்தாலும் கண்களை மூடிக் கொண்டு செய்திருப்பேன் என்றார்.

ராமதாசுடன் இருக்கும் மூன்று பேர் தங்கள் சுய லாபத்திற்காக அவரைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றும் அது தெரிந்த பிறகு தான் தாம் தலைவராவதற்கு ஒப்புக்கொண்டேன் என்றும் அன்புமணி கூறினார்.

திமுக தான் பாமகவிற்கு எதிரி என்றும் அக்கட்சிக்கு எதிராகத்தான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கூறிய அன்புமணி, விசிகவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சட்ட விதிகளின்படி, பொதுக்குழுவை பாமக நிறுவனர் வழிகாட்டுதலின்படி கூட்ட வேண்டும் என்று மட்டுமே உள்ளதாகக் கூறிய அன்புமணி, பொதுக்குழுவை நடத்துவதற்கும் கட்சியை நடத்துவதற்கும் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் கூறினார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சார் யாரு டாடாவுக்கே டஃப் கொடுத்தவருடா..! சர்வீஸ் மைய தில்லுமுல்லு..! உள்ளே நடந்தது என்ன?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies