RECENT NEWS

தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது..! 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்..

முகப்பு

நகைக்காக காது, மூக்கு அறுப்பு; மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்!

May 21, 2025 04:28 PM

221

நகைக்காக காது, மூக்கு அறுப்பு;  மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்!

மாடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து, நகைகளை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள சின்னேரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. கணவனை இழந்த இவருக்கு ராஜா, முருகானந்தம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதில் முருகானந்தம் என்ற மகனுக்கு திருமணமாகி, தனியாக குடும்பத்துடன் திருப்பூர் பல்லடம் பகுதியில் வசித்து வருகிறார். மற்றொரு மகன் ராஜா சேலம் நகை கடையில் வேலை செய்து வந்த நிலையில் மூதாட்டி மகன் ராஜாவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாடு மேய்க்க சென்ற மூதாட்டி மாலை 7மணி ஆகியும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த உறவினர்கள் மூதாட்டியை தேடி சென்றுள்ளனர். அப்போது மூதாட்டிக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடைகள் கலைந்து, தலையில் பலத்த காயத்துடன் கொடூரமான முறையில், கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடந்தார். மேலும் மூதாட்டியின் காது அறுக்கப்பட்டு, காதில் இருந்த தோடு, மற்றும் மூக்குத்தி ஆகியவற்றையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

பின்னர் இது குறித்து தீவட்டிபட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்குவந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதைத்தொடர்ந்து சம்ப இடத்தில் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

காடையாம்பட்டி அருகே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது ஆடைகள் கலைந்த நிலையில் இருப்பதால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடைபெற்று கொலை செய்யப்பட்டாரா? என்ற பல்வேறு கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் தீவட்டிப்பட்டி பகுதியில் திருடர்கள் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் நகை பறித்து தப்பி ஓட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அந்த 78 நாட்கள் கொடுமை.. அவங்க மதிக்க மாட்டாங்க.. பெண்ணின் கண்ணீர் ஆடியோ..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies