முகப்பு
அரசு பேருந்து நடத்துனர் கார் ஏற்றிக் கொலை.. “கிராஸ் கனெக்சன்” பயங்கரம்..! விபத்தின் விபரீத பின்னணி
May 21, 2025 01:50 AM
436
அரசு பேருந்து நடத்துனர் கார் ஏற்றிக் கொலை.. “கிராஸ் கனெக்சன்” பயங்கரம்..!
உருக உருக காதலித்து .. வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்த ஒரு அரசு பேருந்து நடத்துனர் மர்மமான முறையில் விபத்தில் பலியாகிறார்... அவர் மீது மோதிய காருக்கு பதிவெண் இல்லை.. இந்த சந்தேகம் வழக்கின் விசாரணையை நீடிக்க செய்கிறது... அடுத்த 24 மணி நேரத்தில் போலீசார் திறமையாக துப்பு துலக்கியதால் கொடூர கொலை கும்பலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்... உண்மை காதலுக்கு வேட்டு வைத்த கிராஸ் கனெக்சன் பயங்கரம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்துள்ள மேலப்பட்டமுடையார் புரத்தை சேர்ந்தவர் வேல்துரை. 43 வயதான இவர் பாபநாசம் அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் சில வருடங்களுக்கு முன்பு பேச்சியம்மாள் என்கிற உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததால் தனது காதல் மனைவியுடன் அடைக்கலப்பட்டணத்திற்கு இடம் பெயர்ந்தனர்.
இந்த தம்பதியர் இரு குழந்தைகளுடன் அடைக்கலபட்டணத்தில் உள்ள பைக் மெக்கானிக் முத்து சேர்மன் என்கிற சுதாகரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். இந்த நிலையில் திங்கட்கிழமை காலை வேல்துரை தனது இரு சக்கர வாகனத்தில் பணிக்கு புறப்பட்டுள்ளார். பைக்கில் நெல்லை தென்காசி நான்கு வழிச்சாலையில் பாவூர்சத்திரம் நோக்கி சென்ற போது தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே பைக்கின் பின்னால் அதிவேகமாக வந்த பம்பர் பொறுத்தப்பட்ட டாடா இண்டிகா கார் ஒன்று பைக் மீது மோதியது. மோதிய வேகத்தில் சாலையோரம் இருந்த இரும்பு மின் கம்பம் வளைந்து சரிந்தது.
இதில் பைக்குடன் தூக்கி வீசப்பட்ட வேல்துரை தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். காரை ஒட்டி வந்த நபரும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு நபரும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடியதாக சம்பவத்தை நேரில் பார்ர்த்தவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற பாவூர்சத்திரம் போலீசார் உயிரிழந்த வேல்துரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த வேல்துரையின் முகம் கார் மோதியதில் முழுவதுமாக சிதைந்து காணப்பட்டது அவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்தது. விபத்து குறித்து விசாரணையில் இறங்கிய போலீசார், காரில் நம்பர் பிளேட் இல்லாததாலும், கார் விபத்து குறித்து எந்த ஒரு ஓட்டுனருரம் காவல் நிலையத்தில் சரண் அடையாததாலும் விபத்து குறித்து சந்தேகம் ஏற்பட்டது.
விபத்தை ஏற்படுத்திய கார் குறித்து அந்த பகுதியில் விசாரணை செய்ததில் கார் அடைக்கலபட்டிணத்தை சேர்ந்த மெக்கானிக் சுதாகரிடம் இருந்ததும், சம்பவத்தன்று இந்த காரை ஆறுமுகம் என்பவர் ஒட்டி சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து காரை ஓட்டிச்சென்ற பூலாங்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரை பாவூர்சத்திரம் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். இண்டிகா கார் மோதி இரும்பு மின்கம்பமே சாய்ந்துள்ளது என்றால் எந்த அளவுக்கு வேகத்துடன் காரை இயக்கி இருப்பாய் ? என்று விசாரித்த போலீசார் காருக்குள் இருந்த மற்றொரு நபர் யார் ? என்று விசாரித்த போது , காருக்குள் யாரும் இல்லை என்று ஆறுமுகம் மறுத்தார்.
விபத்து வழக்கில் ஓட்டுனர் மீது மட்டும் தான் வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அப்படி இருக்க விபத்தான காருக்குள் இருந்து இறங்கிச்சென்ற நபரை மறைக்க வேண்டிய அவசியம் எதற்கு ? என்று போலீசார் விசாரணையை விரிவுபடுத்தினர். போலீசாரின் சிறப்பான கவனிப்பால் காருக்குள் இருந்தது மெக்கானிக் சுதாகர் என்பதை ஆறுமுகம் ஒப்புக் கொண்டார்.
போலீசார் சுதாகரை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு அழைத்தனர். தான் சாமி கும்பிடுவதற்காக சம்பவத்திற்கு முந்தைய நாளே திருச்செந்தூர் வந்து விட்டதாகவும், தனக்கு விபத்து குறித்து எந்த தகவலும் தெரியாதும் என்றும் கூறினார். காவல் நிலையம் வந்த போதும், போலீசாரிடம் தான் முந்தின நாள் பயணித்த பேருந்து பயணச்சீட்டை போலீசாரிடம் காண்பித்தார். உண்மையில் முந்தின நாள் பேருந்தில் ஏறி திருச்செந்தூர் செல்ல பயணச்சீட்டு பெற்று விட்டு நடு வழியில் இறங்கி விட்டு , சுதாகர் தங்களிடம் நாடகமாடுவதை போலீசார் ஆறுமுகத்தின் வாக்குமூலத்தால் முன் கூட்டியே கண்டுபிடித்து விட்டனர்.
வேல்துரை விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே போலீசாரின் கவனிப்பால் இந்த விபத்து குறித்த அத்தனை உண்மைகளையும் ஆறுமுகம் போலீசாரிடம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகின்றது.
விபத்தில் பலியான வேல்துரையின் காதல் மனைவி உமாவுக்கும், சுதாகருக்கும் இருந்த கிராஸ் கனெக்சனால் நிகழ்த்தப்பட்ட கொடூர கொலை சம்பவம் அம்பலமானது.
2 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் சுதாகரின் மனைவி இறந்து போனதாக கூறபடுகிறது. இதனால் சுதாகரின் குழந்தைகளையும் உமா அரவணைத்து கவனித்து வந்ததாக சொல்லபடுகிறது. இதில் சுதாகருக்கும் உமாவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. வேல்துரை வேலைக்கு சென்றவுடன் உமாவும், சுதாகரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
இவர்களது நெருக்கம் வேல்துரைக்கு அரசல் புரசலாக தெரியவந்ததால் அவர், இனி சுதாகரின் குழந்தைகளையும் பார்க்க வேண்டாம், சுகாதருடனும் பேச வேண்டாம் என்று தடை போட்டுள்ளார். இதையடுத்து மாத சம்பளத்துக்கு வேலை பார்க்கின்ற தனது கணவரை விட கடை காம்ளக்ஸ் வீடு என வசதியாக உள்ள சுதாகருடன் சேர்ந்து வாழ முடிவெடுத்த உமா, காதலன் சுதாகருடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகின்றது.
அதன்படி காரை ஏற்றி கொலை செய்வது என்று முடிவெடுத்து கேரளாவுக்கு சென்று பழைய இண்டிகா காரை விலைக்கு வாங்கி வந்து அதில் மோதினால் காருக்குள் இருப்பவர்களுக்கு சேதம் அடையாமல் இருக்கும் வகையில் நல்ல கனமான இரும்பு பம்பரை பொருத்தி உள்ளான் சுதாகர். கூட்டாளி ஆறுமுகத்துடன் சேர்ந்து ஒரு வாரமாக அவர் பணிக்கு செல்லும் போது பின் தொடர்ந்து நோட்ட மிட்டபடியே சென்றுள்ளனர். தினமும் வேல்துரை தனது பைக்கில் பாவூர்சத்திரம் சென்று அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பஸ்ஸில் ஏறி பணிக்கு சென்று வருவதை கவனித்துள்ளனர்.
திங்கள் கிழமை அதிகாலையில் பணிக்கு செல்வதற்காக புறப்பட்டுச்சென்ற வேல்துரையை , திட்டமிட்டபடி காரில் பின் தொடர்ந்து சென்று அவர் மீது அதிவேகமாக காரை கொண்டு மோதியுள்ளனர். பைக்குடன் வேல்துரை இரும்பு மின் கம்பத்தில் சேர்த்து வைத்து மோதப்பட்டதால் அவரது தலை சிதறி பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.
விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய பாவூர்சத்திரம் போலீசார் மெக்கானிக் சுதாகர்,காரை ஒட்டி சென்ற ஆறுமுகம் , கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வேல்துரையின் காதல் மனைவி உமா ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கொலையும் செய்வாள் பத்தினி என்ற பழமொழியை தூக்கி எறியும் நிலை வந்து விட்டதோ என்று நினைக்க தோன்று கிறது வண்டுகளை மாற்றிக் கொள்ளும் மலர்களின் விபரீத செயல்களை பார்க்கும் போது. தவறான உடல் சார்ந்த தேடலில் திளைத்திருந்த இருவர் கொலை குற்றத்தில் சிக்கி கம்பி எண்ண ஜெயிலுக்கு சென்று விட்டதால் இருவரின் குழந்தைகளும் ஆதரவின்றி தவிக்கும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
திட்டமிட்டு செய்தாலும்... திடீரென்று செய்தாலும் குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu