முகப்பு
20 ஆண்டுகளாக கரு.பழனியப்பனை துரத்தும் சாதிய கொடுமை..! பழ.கருப்பையா நிஜ வில்லனா?
Jun 06, 2025 01:46 PM
945
பழ.கருப்பையா நிஜ வில்லனா?
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியிலும், அரசியல் மேடையிலும் சாதி ஒழிப்பு குறித்து முழங்கிவந்த திரைப்பட இயக்குனர் கரு பழனியப்பன் , 20 ஆண்டுகளுக்கு முன்பு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தன்னை, உறவினர்கள் யாரும் சேர்த்துக் கொள்வதில்லை என்று காரைக்குடி டி.எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளார்..
பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம் உள்ளிட்ட படங்களை இயக்கிவர் கரு பழனியப்பன். இவர் 20 வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரை பூர்வீகமாக கொண்ட பியா என்பவரை காதலித்து பெற்றோரையும் உற்றாரையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். பியா நாகர்கோவிலில் பள்ளிப் படிப்பை முடித்தாலும் மேல்படிப்பின் போது கரு.பழனியப்பனுடன் காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகின்றது. தற்போது இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
சாதி சனமே வேண்டாம் என்று சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கரு பழனியப்பன் தன்னை தனது சொந்த சாதியினர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தனது பெரியப்பா பழ கருப்பையாவின் தூண்டுதலின் பேரில் தன்னிடம் எவரும் பேசுவதில்லை என்றும் தனக்கு சாதிய வன்கொடுமை நடப்பதாகவும் பரபரப்பு புகார் ஒன்றை பொது வெளியில் தெரிவித்தார். தொடர்ந்து இது குறித்து காரைக்குடி டி.எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளித்தார்.
தமிழகத்தில் பெரியார் சாதியை ஒழித்ததாக விவாத மேடைகளிலும், அரசியல் கட்சியின் மேடைகளிலும் முழங்கி வந்தவர் பெரியாரிய சிந்தனையாளரான கரு பழனியப்பன் . தன்னை விட அழகிலும், அந்தஸ்திலும் உயர்வான பெண்ணாக பார்த்து காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்படி இருக்க அவருக்கு என்ன சாதிய கொடுமை என்று விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வியப்பை ஏற்படுத்தியது.
காரைக்குடியில் அதிகமாக செட்டிலாகி உள்ள குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் கரு பழனியப்பன். 77 வயதான அவரது தந்தை சொந்த ஊரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றார். கரு பழனியப்பனின் காதல் திருமணத்தை காரணம் காட்டி , தந்தையுடன் உறவினர்கள் எவரும் பேசுவதில்லை என்றும் நல்லது கெட்டதற்கும் எவரும் அவரை அழைப்பதில்லை என்றும் கூறப்படுகின்றது. அவர் சார்ந்த சாதிக்கு என்று சுற்றுவட்டார பகுதியில் 9 கோவில்கள் உள்ளதாம். இந்த 9 கோவில்களுக்குள் உள்ள பரம்பரையினர் உடன் மட்டுமே அவர்களுக்குள் திருமண சம்பந்தம் செய்து கொள்வது வழக்கம் என்கிறார்கள்.
குறிப்பாக ஒரு பெண்ணுக்கு வரன் தேடும் போது சம்பந்தப்பட்ட கோவிலில் இருந்து எந்த கோவிலில் உள்ள மாப்பிள்ளையை எடுக்கிறார்களோ அந்த கோவிலுக்கு நோட்டீஸ் வழங்கப்படுமாம். உடனடியாக அந்த கோவில் பரம்பரையினர் விசாரித்து சம்பந்தப்பட்ட மாப்பிள்ளைக்கு வேறு யாருடனும் திருமணம் ஆகவில்லை என்று உறுதிபடுத்த பட்ட பின்னரே அந்த திருமணம் நடத்தப்படும் என்று கூறப்படுகின்றது. அப்படி திருமணம் செய்து கொண்டதும் மாப்பிள்ளை பெண் வீட்டு கோவிலில் ஒரு புள்ளியாக ஏற்றுக் கொள்ளப்படுவார் என்கின்றனர்.
அந்தவகையில் சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொண்டதால் கரு பழனியப்பன் புள்ளியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மேலும் தனது காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காததால், தனது தந்தையையும் அவரது சாதியினர் பெரியப்பா பழ கருப்பையாவின் தூண்டுதலின் பேரில் ஒதுக்கி வைத்திருப்பதாக கரு.பழனியப்பன் குற்றஞ்சாட்டியுள்ளார். காதல் திருமணம் செய்த காரணத்தால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகனும் காங்கிரஸ் எம்.பியுமான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோரும் இதுவரை புள்ளிகளாக சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது புள்ளி பிரச்சனை மட்டுமல்ல, தனியாக வசித்து வரும் 77 வயதான தனது தந்தையின் பராமரிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் கரு பழனியப்பன் தற்போது காவல் நிலைய கதவுகளை தட்டி இருப்பதாக கூறப்படுகின்றது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu