முகப்பு
கன்னியாகுமரியில் நண்பனைக் கொன்றுவிட்டு, கதறித் துடித்த இளைஞன் கைது
May 14, 2025 04:54 AM
512
கன்னியாகுமரியில் நண்பனைக் கொன்றுவிட்டு, கதறித் துடித்த இளைஞன் கைது
கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் திருநயினார்குறிச்சியில் வேறொருவரைக் கொலை செய்யப் போய், மதுபோதையில் தவறுதலாக தனது நண்பனைக் கொன்ற இளைஞன், அவர் உடல் மீது படுத்துக் கதறி அழுது கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறைச்சிக் கடையில் வேலை செய்து வந்த நண்பர்களான அனீஷும் பரத்தும் தங்களது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து அங்குள்ள தென்னந்தோப்பில் மது அருந்தியுள்ளனர்.
இரவு நீண்ட நேரம் ஆனதால் வீட்டிற்கு செல்ல முயன்ற பரத்தை போதையில் இருந்த நண்பர்கள் தடுத்ததாகவும் அப்போது ஏற்பட்ட மோதலில் அஜிஷ் என்பவரை அனிஷ் கறி வெட்டும் கத்தியால் வெட்ட முயன்றதாகவும் கூறப்படுகிறது. அஜிஷுக்கு வைத்த குறி தவறிப்போய் பரத்தின் நெஞ்சில் பட்டதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu