RECENT NEWS

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

BIG STORIES

TVK அக்கா' கட்சியில் இருந்து வெளியேறியது ஏன்? யார் அந்த 'நாசக்காரர்'?

May 04, 2025 02:07 PM

1232

TVK அக்கா' கட்சியில் இருந்து வெளியேறியது ஏன்?
யார் அந்த 'நாசக்காரர்'?

TVK அக்கா' கட்சியில் இருந்து வெளியேறியது ஏன்?

சோசியல் மீடியாக்களில் பிரபலமாக வலம் வந்தவர் கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த இளம் அரசியல்வாதியான வைஷ்னவி. இவரை அவரது ரசிகர்கள் 'TVK அக்கா' என செல்லமாக அழைத்து வந்தனர். தாத்தா அதிமுக, தாய் திமுக என அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த வைஷ்னவி தன்னை விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைத்து கொண்டார்.

மாணவர்களுக்கு ஓவிய போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவது, சிறைவாசிகளுக்கு புத்தம் கொடுப்பது என உதவிகளை வைஷ்னவி செய்து வந்துள்ளார். சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டாகி வந்த வைஷ்னவி தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகுதாக அறிவித்து பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

"எனது மனதை கல்லாக்கி கொண்டு எழுதுகிறேன்" என தொடங்கிய அந்த கடிதத்தில், மூன்று மாதங்களாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினேன், என் வளர்ச்சியை தடுப்பதாக நினைத்து சிலர் கட்சியின் வளர்ச்சியை தடுக்கிறாரகள் என குறிப்பிட்டுள்ளார்.

சிறுவயதில் இருந்து தான் சேமித்த 5 லட்சம் ரூபாயை, குழந்தைகளுக்கும், மக்களுக்கும் செலவு செய்தேன், ஆனால் கட்சியில் இருக்கும் நாசக்காரர்களின் சதியால் உதவி செய்ய முடியாமல் நிராகரிக்கபட்டேன் என வேதனையோடு தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு பொதுச் செயலாளரை சந்திக்க சென்றால், தன்னை அனுமதிக்கவில்லை, மேடை ஏறினால் மனித சங்கிலியால் கீழே தள்ளிவிடப்பட்டேன் என அடுக்கடுக்காக குற்றம் சாட்டியுள்ளார். சமூக வலைத்தளங்களில் போஸ்ட் போட்டால் உங்களுக்கு அதிக லைக்ஸ் வருகிறது. மாவட்ட செயலாளரை விட பிரபலமாகி கொண்டிருக்கிறீர்கள் என வெளிப்படையாகவே மிரட்டினார்கள் என வைஷ்னவி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அழுதுகொண்டே ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டேன், அதற்கு "கட்சி ஆரம்பித்த பின்பு தான வந்த..உனக்கு என்ன அவசரம்" என நிராகரித்து விட்டார்கள். என்னுடைய மக்கள் பணிக்கு முற்றுப் புள்ளி வைக்க பார்க்கிறார்கள் நான் தொடர்ந்து மக்கள் சேவை செய்வேன் அதோடு தன்னை த.வெ.க வில் இருந்துவிடுவித்து கொள்வதாகவும் அந்த அறிக்கையில் வைஷ்னவி தெரிவித்துள்ளார். இதனால் அப்படி அவரை தடுத்த யார் அந்த 'நாசக்காரர் யார்? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

அதே நேரத்தில் பிரபலம் ஆன பின்பு தனியாக பவுன்சர், ப்ரோமஷன் வீடியோ என அவர் திசை மாறி பயணித்து கொண்டிருப்பதாகவும், அவரின் இந்த முடிவு கட்சியில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என த.வெ.கவினர் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies