BIG STORIES
காசில்லன்னு தான் GH க்கு வர்ரோம்.. இனி வீட்டிலேயே செத்துர்ரோம்... ” போதை ஊழியர் விபரீத செயல்..! நோயாளிகள் ஜஸ்ட் மிஸ்ஸான தருணம்
Apr 29, 2025 12:44 AM
2764
காசில்லன்னு தான் GH க்கு வர்ரோம்.. இனி வீட்டிலேயே செத்துர்ரோம்... ” போதை ஊழியர் விபரீத செயல்..!
சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் எழுதி கொடுத்த மாத்திரை சீட்டில் உள்ள மருந்துகளுக்கு பதிலாக , மருந்துகளை மாற்றிக்கொடுத்த புகாரில் போதையில் இருந்த மருந்தக ஊழியரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் சுமார் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரை வந்து சிகிச்சை எடுத்து செல்கின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து மருத்துவர்களை பார்த்து நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் பெற்று செல்கின்றனர்.
இந்த நிலையில் திங்கட் கிழமை மாலை மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் , பொதுமக்கள் மருந்து மாத்திரைகளை வாங்க இரு கவுன்ட்டர்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது ஒரு பக்கம் பணியில் இருந்த 56 வயதான மருந்தாளுனர் மாதேஷ் என்பவர் மருந்து மாத்திரைகளை மாற்றி மாற்றி வழங்கி உள்ளார். தள்ளாட்டத்துடன் காணப்பட்ட அவரை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் மருந்துகளை மாற்றி மாற்றி தருவதாகவும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து என்றும் இளைஞர் ஒருவர் புகார் தெரிவித்தார்
மருத்துவர்கள் யாரும் அதனை கண்டு கொள்ளாத நிலையில் மருந்தாளுனர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் , அவரை அழைத்து சென்று விசாரிக்க வேண்டும் என சுமார் 20 நிமிடத்துக்கும் மேலாக அந்த இளைஞர் தனி ஒருவனாக மருந்தகம் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து மாதேஷ் மருந்தக கவுன்ட்டரை பூட்டி விட்டு உள் பக்கம் சென்று அமர்ந்து கொண்டார். நோயாளிகளின் உறவினர்கள் ஒரு பக்கமாக நீண்ட நேரம் காத்திருந்து மருந்து வாங்கும் நிலை ஏற்பட்டது.
சிறிது நேரத்திற்கு பின்னர் தகவல் அறிந்து வந்த மருத்துவமனை காவல் நிலைய தலைமை காவலர்,மருந்தாளுனர் மாதேஷை விசாரணைக்கு அழைத்துச் சென்றார்.
அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் மது அருந்தி இருப்பது தெரியவந்ததால் அவரிடம் விசாரித்து வருகின்றனர். அந்த இளைஞர் உஷாராக இல்லையென்றால் தவறான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு நோயாளிகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும் என்று தெரிவித்த நோயாளிகளின் உறவினர்கள், இது போன்ற குடிகார ஆசாமிகளை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆதங்கம் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu