மாவட்டம்
மாமனாருக்கு உயிரோடு தீவைத்த மருமகளின் காதல்.. கும்பலாக சிக்கியது எப்படி?
Jan 30, 2026 02:31 PM
12
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முந்திரி விவசாயி உயிரோடு தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் அவரது மருமகள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மாளிகம்பட்டு பகுதியை சேர்ந்தவர் முந்திரி விவசாயி ராஜேந்திரன். இவர் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த நபருடன் பைக்கில் பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மாளிகம்பட்டு அருகில் காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று பைக்கை மறித்து நிறுத்தியது.
காரில் இருந்து கையில் பெட்ரோல் பாட்டிலுடன் இறங்கிய இருவர் இரண்டு சக்கர வாகனத்தை மறித்து ராஜேந்திரன் மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு தீ வைத்ததாக கூறப்படுகின்றது. உடலில் தீபற்றியதும் அலறியப்படி ராஜேந்திரன் சாலையில் இறங்கி அங்குமிங்கும் ஓடியதை கண்ட அக்கம் பக்கத்தினர் மிரண்டு ஓடினர்.
அதற்குள்ளாக தீவைத்த 2 பேரும் காரில் ஏறி தப்பிச்சென்ற நிலையில் சிலர் ராஜேந்திரனின் உடலில் எரிந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜேந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் அடிப்படையில் நான்கு தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
காரின் பதிவெண்ணை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் பார்த்திபன் என்பவர் சிக்கினார் அவர் கொடுத்த தகவலின் பேரில் மணிகண்டன் மற்றும் மாற்றுதிறனாளியான குபேந்திரன் ஆகிய மேலும் இருவரையும் போலீசார் சுற்றிவளைத்தனர். விசாரணையில் ராஜேந்திரனின் மருமகளின் தூண்டுதலின் பேரில் நடத்தப்பட்ட சம்பவம் என்பது தெரியவந்தது.
தீவைத்து எரிக்கப்பட்ட ராஜேந்திரனின் மகன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் மருமகள் ஜெயப்பிரியா பண்ருட்டிக்கு தையல் வகுப்பு சென்று வந்த போது மணி கண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வருடமாக பழக்கம் நெருக்கமான நிலையில் இது குறித்து ராஜேந்திரனுக்கு தெரியவந்துள்ளது. அவர் தனது மருமகளை கண்டித்துள்ளார். குடும்பத்தின் பெயர் கெட்டு விடும் என்று எச்சரித்துள்ளார்.
மணிகண்டனை ஜெயப்பிரியா சந்திக்க ராஜேந்திரன் தடையாக இருந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் மருமகள் ஜெயப்ப்ரியாவின் தூண்டுதலின் பேரில் ராஜேந்திரனை பெட்ரோல் ஊற்றி தீவைக்க மணிகண்டன் திட்டமிட்டுள்ளார். தனது நண்பர்களான பார்த்திபன் மற்றும் குபேந்திரனுக்கு மதுவாங்கிக் கொடுத்து கையோடு அழைத்து வந்த மணிகண்டன் ராஜேந்திரன் மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு தீவைத்து எரித்தது தெரியவந்தது. ஓசி மதுவுக்கு ஆசைப்பட்டு சென்றதால் கூட்டாளிகளான பார்த்திபனும் குபேந்திரனும் கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.
மருத்துவமனையில் ராஜேந்திரன் உயிருக்கு போராடி வரும் நிலையில் , இந்த சம்பவம் தொடர்பாக ஜெயப்பிரியா, மணிகணடன் , பார்த்திபன், குபேந்திரன் ஆகிய 4 பேரை காடாம்புலியூர் போலீசார் கைது செய்தனர்...
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu