முகப்பு
ஓடும் ரயிலில் நடுங்க வைத்த சைக்கோ... யார் அந்த வடமாநில நபர்? எஸ்பிரஸில் திகில்..!
Apr 12, 2025 12:57 PM
355
மனைவிக்கு அலகு குத்த சென்ற கணவர்... ஓடும் ரயில் கொலை செய்த சைக்கோ யார்?
திருப்பத்தூர் மாவட்டம் குறும்பேரி பகுதியைச் சேர்ந்த 35 வயதான நவீன் என்பவர் திருப்பூரில் தனியார் பனியன் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்துள்ளார். நவீனின் மனைவி பங்குனி உத்திரம் திருவிழாவிற்கு அலகு குத்திக் கொள்வதாக வேண்டிக்கொண்டதால் நவீன் வேலை பார்க்கும் இடத்தில லீவு வாங்கிக்கொண்டு சொந்த ஊரை நோக்கி புறப்பட்டுள்ளார்.
நள்ளிரவில் திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பத்தூர் செல்ல திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலின் ரிசர்வ் செய்யப்படாத பெட்டியில் நவீன் பயணம் செய்துள்ளார். அப்போது ரயில் சேலம் அருகே பொம்மிடி ரயில் நிலையம் அருகே ரயில் சென்றுகொண்டிருந்தபோது படியில் பயணித்து கொண்டிருந்த நவீனிடம் வடமாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் படிக்கட்டில் இடம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
நவீன் இடம் தர மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த வடமாநிலத்தை சேர்ந்த நபர் நவீனை காலால் எட்டி உதைத்துள்ளார். இதனால் ஓடும் ரயிலில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த நவீன் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உடனே அங்கிருந்த பயணிகள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கும் சேலம் ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்த நிலையில் ரயில் ஜோலார்பேட்டையில் நிறுத்தப்பட்டது. ரயிலிலேயே நின்று கொண்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த அந்த நபரை காவல் நிலைய ஆய்வாளர் சிவ செந்தில்குமார் கைது செய்தார்.
கைதான நபரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 30 வயதுமிக்க பஜாஜ் டுட்டூ என்பதும் 10 நாட்களுக்கு முன்பு தனது 2 கூட்டாளிகளோடு வேலை தேடி தமிழ்நாடு வந்ததும் தெரியவந்துள்ளது. 2 நண்பர்களுக்கும் வேலை கிடைத்த நிலையில் தனக்கு வேலை கிடைக்காத விரக்தியில் மீண்டும் சொந்த ஊருக்கே பஜாஜ் டுட்டூ ரயிலில் சென்று கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
கோவில் திருவிழாவிற்கு சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தவர் ஓடும் ரயில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu