முகப்பு
"எதிரியை திட்டுவதற்கு எங்களை காயப்படுத்துவதா?" துரைமுருகனின் சர்ச்சை பேச்சு..! அடுத்தடுத்து சிக்கும் அமைச்சர்கள்
Apr 11, 2025 01:56 PM
619
"எதிரியை திட்டுவதற்கு எங்களை காயப்படுத்துவதா?" துரைமுருகனின் சர்ச்சை பேச்சு..! அடுத்தடுத்து சிக்கும் அமைச்சர்கள்
தி.மு.க வின் பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான துரை முருகன் அண்மையில் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றபோது 'தமிழகத்தில் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் தான் கட்சிகள்,மற்றவை எல்லாம் கட்சிகள் இல்லை என அவர் கூறினார்.
அப்போது எதிர்க்கட்சிகளின் கூட்டணியை கிண்டலடிப்பதாக நினைத்து மாற்றுத் திறனாளிகளை தாக்கி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாற்றுத் திறனாளிகளை இழிவாக பேசியதை கண்டித்து தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற உரிமை மீட்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மேலும் இது குறித்து பேசிய தேசிய பார்வையற்றோர் இணையத்தின் திட்ட இயக்குனர் மனோகரன், தனது அரசியல் எதிரிகளை எப்படி வேண்டுமாலும் பேசலாம் என்ற பேச்சை துரை முருகன் மாற்றிக் கொள்ளவேண்டும் என கண்டனத்தை தெரிவித்ததோடு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் துரை முருகன். அந்த அறிக்கையில் இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை கருணை உள்ளத்தோடு "மாற்றுத் திறனாளிகள்" என்று பெயரிட்டு அழைத்தார் கலைஞர்.
கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.
ஏற்கனவே அமைச்சர் பொன்முடி மதத்தை இழிவு படுத்துவதாக நினைத்து பெண்களை இழிவு படுத்தி சர்ச்சையாக பேசியதால் அவரை திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் நீக்கி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மூத்த அமைச்சர் துரை முருகன் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu