தமிழ்நாடு
'எஸ்.எஸ்.ஐ அயோக்கியத்தனம்..' ஆவேசமான டி.ஐ.ஜி வருண் அலறிய மைக்.. பதறிய இன்ஸ்..!
Apr 10, 2025 01:14 AM
463
'எஸ்.எஸ்.ஐ அயோக்கியத்தனம்..' ஆவேசமான டி.ஐ.ஜி வருண் அலறிய மைக்.. பதறிய இன்ஸ்..!
அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளிக்க சென்ற பெண்ணை அசிங்கமாக பேசிய பெண் உதவி ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டி.ஐ.ஜி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்
அரியலூரை சேர்ந்த பெண் ஒருவர் தான் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதாக கூறி அங்குள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட எஸ்.எஸ். ஐ சுமதி என்பவர் புகார் குறித்து விசாரிக்காமல் நாளைக்கு வா என்று அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில் புகார் அளித்த பெண், எஸ்.எஸ்.ஐ சுமதியை செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு உடல் நிலை சரியில்லாத்தால் தாங்கள் சொன்ன நாளில் காவல் நிலையம் வர இயலவில்லை, இன்று வரலாமா ? என்று கேட்டுள்ளார். அதற்கு சுமதி கொஞ்சக் கூட மனிதாபிமானம் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணை அசிங்கமாகவும், ஆபாசமாகவும் திட்டி தனது செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து ஆடியோ ஆதாரத்துடன் திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து ஓப்பன் மைக்கில் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரை அழைத்து பேசிய டி.ஐ.ஜி வருண்குமார், எஸ்.எஸ்.ஐ சுமதியின் நடவடிக்கை அயோக்கியத்தனமானது என்று கண்டித்தார்
இதுபோன்று தான் புகார் அளிக்க வரும் பாதிக்கப்பட்டோரிடம் நடந்து கொள்வீர்களா ? என்று உக்கிரமாக கேள்வி எழுப்பிய டிஐஜி வருண்குமார், தான் நேரடியாக ஆய்வுக்கு வரும் போது பார்த்துக் கொள்கிறேன் என்று மைக்கில் கடுமையாக எச்சரித்தார்
இதற்கிடையே புகார்தாரரிடம் கண்ணியமற்ற முறையில் நடந்து கொண்டதாக எஸ்.எஸ்.ஐ சுமதி யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ள டி.ஐ.ஜி வருண் குமார் , துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu