முகப்பு
தீ குளித்ததற்கு போலீஸ் தான் காரணமா? கதறும் குடும்பத்தினர்..! இளைஞருக்கு நேர்ந்தது என்ன?
Jun 12, 2025 02:12 AM
79
கன்னியாகுமரி ரயில் நிலையம் முன்பு, இரவு நேரத்தில் கையில் பெட்ரோலுடன் வந்த வாலிபர் ஒருவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் இளைஞரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 57 சதவீத தீக்காயத்தோடு அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர் உயிருக்கு போராடி வருகிறார்.
விசாரணையில் தீக்குளித்த நபர் ஆனைபாலம் பகுதியை சேர்ந்த 29 வயதான விஷ்ணுநிதி என்பது தெரியவந்துள்ளது. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த விஷ்ணுநிதி , தனது தந்தையோடு பைக்கில் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆனைபாலம் பகுதியில் ஒரு தகராறில் விஷ்ணு நிதி, ஈடுபட்டதால் போலீசார் அவரின் வாகனத்தை பறிமுதல் செய்து வைத்ததாக அவரது உறவினர் தெரிவித்துள்ளார். பைக் இல்லாததால் பெயிண்டிங் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்த விஷ்ணு நிதி, காவல் நிலையத்திற்கு சென்று கேட்டபோது போலீசார் பைக்கை தர மறுத்து அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
பைக் கிடைக்காத மன உளைச்சலில் விஷ்ணு நிதி, ரயில் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாகவும், விஷ்ணு நிதியின் பைக் காவல் நிலையத்தில் இருப்பதை தான் பார்த்ததாகவும் அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.
விஷ்ணு நிதி மீது ஏற்கனவே ஒரு அடிதடி வழக்கு இருப்பதாகவும், அவரது பைக்கை தாங்கள் பறிமுதல் செய்யவில்லை எனவும் கன்னியாகுமரி போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அவர் வேலை இல்லாத காரணத்தினால் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றிருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
பைக் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் இருப்பதை அவரது சகோதரர் பார்த்ததாக கூறிய நிலையில் பைக் பறிமுதல் செய்யப்படவில்லை என போலீசார் தரப்பில் கூறியிருப்பதால் குழப்பம் நிலவி வருகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu