முகப்பு
பல பெண்களை வேட்டையாடிய காமுகன்.. காட்டுக்குள் எரிந்து சடலம்.. 8 பெண்கள் சிக்கிய திகில்..
Jun 12, 2025 02:10 AM
109
ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தை சேர்ந்த 60 வயதான முதியவர் ஒருவர், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி இறந்ததால் தனியாக வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி முதல் முதியவர் மாயமானதாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
போலீசார் அவரை தேடி வந்தபோது, காணாமல் போன முதியவரின் கிராமத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் உடல் எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவர் யார் என விசாரணை செய்தபோது, இறந்தது காணாமல் போன முதியவர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் முதியவர் கொலையானதற்கு என்ன காரணம் என போலீசார் விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.மனைவியை இழந்து வீட்டில் தனியாக வசித்து வந்த முதியவர், அதே பகுதியை சேர்ந்த பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்லாததால் அதனை சாதகமாக்கிக்கொண்ட அந்த காமுகன் தொடர்ந்து பெண்களை வேட்டையாடி வந்துள்ளான்.
இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதியன்று, அதே பகுதியை சேர்ந்த 52 வயதான கணவரை இழந்த பெண் வீட்டில் இருந்தபோது அந்த முதியவர், வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த சோகத்தை உறவினர்களிடம் தெரிவித்தபோது, தாங்களும் அந்த நபரால் பாதிக்கப்பட்டதாக சில பெண்கள் கூறியுள்ளனர்.
இதனால் 2 ஆண்கள் துணையோடு, 8 பெண்கள் அந்த காமுகனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவன் தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்த அந்த பெண்கள் கத்தியால் ஆத்திரம் தீரும் வரை குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை அப்பகுதியில் இருந்த காட்டுப்பகுதிக்குள் எடுத்துச் சென்று எரித்ததும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து கொலையில் ஈடுபட்ட 8 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து பேசிய கஜபதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ஜதீந்திரா குமார், கைதான 8 பெண்களில் 6 பேர் அந்த முதிவரின் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும், அவர்கள் எந்த புகாரும் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
நடந்ததை வெளியே சொல்ல மாட்டார்கள் என நினைத்து காமுகன், தொடர்ந்து அதே செயலில் ஈடுபட்டு வந்ததை பார்த்த பெண்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு தீர்த்து கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu