RECENT NEWS

10 அணுகுண்டு தயாரிக்கத் தேவையான 400 கிலோ யுரேனியம் பதுக்கலா?

BIG STORIES

2 பாடிபில்டர்ஸ்.. நீண்ட நேரம்.. மூச்சுதிணறி பெண் பலி..! வீட்டுக்குள் நடந்தது என்ன ?

May 03, 2025 02:20 AM

2

2 பாடிபில்டர்ஸ்.. நீண்ட நேரம்.. மூச்சுதிணறி பெண் பலி..! வீட்டுக்குள் நடந்தது என்ன ?

2 பாடிபில்டர்ஸ்.. நீண்ட நேரம்.. மூச்சுதிணறி பெண் பலி..! வீட்டுக்குள் நடந்தது என்ன ?

ஓசூர் அருகே பெண் ஜிம் மாஸ்டர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், திடீர் திருப்பமாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். மனைவியின் மரணத்துக்கு புதுசாக காரணம் சொன்னவர் வசமாய் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த ஜூஜூவாடி அருகே தனியார் லேஅவுட் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த பாடி பில்டர் தம்பதிகள் பாஸ்கர் - சசிகலா.

காட்பாடி பகுதியைச் சேர்ந்த பாஸ்கருக்கும், ராணிப்பேட்டையைச் சேர்ந்த சசிகலாவுக்கும் ஏழு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளது. இந்த தம்பதியர் ஒசூர் பகுதிகளில் நான்கு இடங்களில் ஆண், பெண் என இருபாலருக்குமான உடற்பயிற்சி மையம் நடத்தி வந்தனர், சசிகலாவும் ஜிம் மாஸ்டராக இருந்து பயிற்சி நிலையம் வரும் பெண்களுக்கு பயிற்சி அளித்து வந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் 30 ந்தேதி இரவு தனது மனைவி மூச்சுத்தினறி இறந்து விட்டதாக பாஸ்கர் , சிப்காட் போலீசுக்கு தகவல் அளித்தார். போலீசார் முதற்கட்டு விசாரணையில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தது தெரியவந்ததால், மர்மமரணம் என வழக்கு பதிந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

பெண்ணின் குடும்பத்தினர் சசிகலாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், பாஸ்கர் கொலை செய்துவிட்டு நாடகமாடுவதாகவும் போலீசாரிடம் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் பாஸ்கரிடம் தொடர் விசாரணையை மேற்கொண்டனர் . அப்போது போலீசாரிடம், சம்பவத்தன்று தானும் மனைவியும் தாம்பத்தியத்தில் நீண்ட நேரம் ஈடுபட்டதாகவும் , ஒரு கட்டத்தில் தாக்குப்பிடிக்க இயலாமல் தனது மனைவி மூச்சு திணறி இறந்து விட்டதாக தெரிவித்தார், சசிகலாவின் கழுத்துப்பகுதியில் பிடித்து அழுத்தியது போன்று ரத்தம் கட்டி இருப்பதை சுட்டிக்காட்டி போலீசார் விசாரித்த போது புது புது காரணங்களை சொல்லி பாஸ்கர் தப்பிக்கமுயன்றார். இருந்தாலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது குரல்வளை நெரிக்கப்பட்டதால் மூச்சுதிணறல் ஏற்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என்று சொல்லப்பட்டிருந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய பக்குவமான விசாரணையில் மனைவியை துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததை பாஸ்கர் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். பாஸ்கர் ஜிம்முக்கு வரும் சில பெண்களுடன் திருமணம் கடந்த உறவு வைத்திருந்ததாகவும் இதையறிந்து சசிகலா கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரியும் சூழல் ஏற்படும் போதெல்லாம் உறவினர்கள் சமாதனம் பேசி சேர்த்து வைத்துள்ளனர்.

அதன் பின்னரும் பாஸ்கரின் நடவடிக்கை மாறாததால் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் சம்பவத்தன்று இனி தான் அந்த பெண்களை தேடிச்செல்ல மாட்டேன் என்று கூறி மனைவியிடம் பாசமாக இருப்பது போன்று நடித்து பாஸ்கர் தாம்பத்யத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, மனைவி மூச்சுத்திணறி உயிரிழந்து விட்டதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து மனைவி சசிகலா கொலை வழக்கில் ஜிம் மாஸ்டர் பாஸ்கரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரூ.4 கோடி சொத்தை உண்டியலில் போட்ட முன்னாள் ராணுவவீரர்..! மகள்களின் குற்றச்சாட்டு என்ன ?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies