RECENT NEWS

கொரோனா தொற்று - நாடு முழுவதும் 4 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்று - நாடு முழுவதும் 4 பேர் உயிரிழப்பு

Jun 20, 2025

கொரோனா தொற்று - நாடு முழுவதும் 4 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்று - நாடு முழுவதும் 4 பேர் உயிரிழப்பு

Jun 20, 2025

முகப்பு

4 வயது சிறுமிக்கு பள்ளியில் அப்படி என்னப்பா பயிற்சி ? அநியாயமாக போன உயிர்..! தாளாளர் - பணியாளர் கைதான பின்னணி

Apr 30, 2025 01:04 AM

3520

4 வயது சிறுமிக்கு பள்ளியில் அப்படி என்னப்பா பயிற்சி ? அநியாயமாக போன உயிர்..!
தாளாளர் - பணியாளர் கைதான பின்னணி

4 வயது சிறுமிக்கு பள்ளியில் அப்படி என்னப்பா பயிற்சி ? அநியாயமாக போன உயிர்..!

மதுரை கே.கே.நகர் பகுதியில் கோடைகால பயிற்சி வகுப்பு நடத்திய கிண்டர் கார்டன் பள்ளியில் தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து நான்கு வயது சிறுமி உயிரிழந்த நிலையில், கவனக்குறைவாக செயல் பட்டதாக பள்ளி தாளாளர் திவ்யா , உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மதுரை மாநகர் கே.கே நகர் விநாயகர் நகர் பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவர் ஸ்ரீ கின்டர் கார்டன் என்ற மழலையர் பள்ளிகளை கே.கே நகர் மற்றும் சின்ன சொக்கிகுளம் ஆகிய பகுதிகளில் சில ஆண்டுகளாக நடத்திவருகிறார்.
இவர் தனது instagram பக்கத்தில் பள்ளி தொடர்பாக குழந்தைகள் வளர்ப்பு குழந்தைகள் பராமரிப்பு தொடர்பாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் என்பதால் திவ்யாவின் மழலையர் பள்ளியில் பிள்ளைகளை சேர்த்தால் நன்கு திறமையாக படிப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஸ்ரீகின்டர் கார்டன் பள்ளியில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை சேர்த்துள்ளனர்.

அனைத்து பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீ கின்டர் கார்டன் மழலையர் பள்ளியில் 4 வயது குழந்தைகளுக்கு கோடைகால சிறப்பு முகாம் நடைபெற்றது இதில் 20-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் சேர்க்கப்பட்டு கலர்ஸ் ஐன்டிஃபிகேஷன், லெட்டர்ஸ் வாசித்தல், எழுதுதல் , விளையாட்டு என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

மதுரை மாநகர் உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் அமுதன் - சிவ ஆனந்தி தம்பதியினர் தங்கள் இளைய மகள் 4 வயதுடைய ஆருத்ரா இந்த பள்ளியில் கடந்த ஒரு வருடமாக படித்து வந்தார். இந்த நிலையில், கோடைகால சிறப்பு முகாமில் கலந்துகொள்ள பள்ளி நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில் பள்ளிக்கு அழைத்து வந்து விட்டுச்சென்றதாக கூறப்படுகின்றது

செவ்வாய்கிழமை காலை கோடைகால சிறப்பு முகாமில் பங்கேற்ற சிறுமி ஆருத்ரா மாயமான நிலையில் ஆசிரியைகள் பள்ளி முழுவதும் தேடி உள்ளனர் சிறுமி கிடைக்கவில்லை. சிறுமி ஆருத்ராவை காணாமல் தவித்துப்போன ஆசிரியர்கள் ,பள்ளிக்கு பின்புறம் திறந்து கிடந்த தண்ணீர் தொட்டியில் பார்த்த போது உள்ளே மிதந்தபடி சிறுமி கிடப்பதை கண்டு கூச்சலிட்டனர். அந்த வழியாக சென்ற மருந்து விற்பனை பிரதி நிதிகள் 3 பேர் உதவியுடன் குழந்தை ஆருத்ராவை மூர்ச்சையான நிலையில் மீட்டுள்ளனர். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்ற போது, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

குழந்தை ஆருத்ரா உயிரிழந்ததை பெற்றோருக்கு தெரிவித்த நிலையில் மருத்துவமனைக்கு வந்த ஆருத்ராவின் தாயார் மயங்கி விழுந்த நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணா நகர் காவல் துறையினர் விபத்து நடைபெற்ற பள்ளி வளாகப் பகுதிக்கு சென்று பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

கோட்டாட்சியர் ஷாலினியின் விசாரணையில், சிறுமி காணாமல் போயி 20 நிமிடம் கழித்து தான் ஆசிரியைகள் தேட ஆரம்பித்தது தெரியவந்தது. மேலும் காலையில் வாசல் தெளிப்பதற்காக தண்ணீர் தொட்டியை திறந்து போட்டதாக பணியாளரையும், அதனை கவனிக்க தவறியதாக தாளாளர் திய்வாவையும் அண்ணா நகர் காவல்துறையினர் கைது செய்தனர்.

பள்ளி வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கோட்டாச்சியர் ஷாலினி தெரிவித்தார். மதுரை மாவட்டத்தில் உள்ள 120 மழலையர் பள்ளிகளில் உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்தார். மேலும் எந்த ஒரு பள்ளியிலும் பள்ளிக்கல்வித்துறையின் அனுமதி இன்றி கோடைக்கால சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று மாவட்ட ஆட்சிதலைவர் அறிவித்துள்ளார்.

தனது செல்ல மகளை பறிகொடுத்து விட்டு அதிர்ச்சியில் நின்ற தந்தை பேராசிரியர் அமுதன், இப்படி நடக்கும் என நினைத்து கூட பார்க்கவில்லை என்று குழந்தையின் தந்தை வேதனை தெரிவித்தார்

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"உன்னோட தாய் சாபம் குழந்தைகளை பாதிக்கும் மன்னிப்பு கேட்டு போ..” புத்தி சொன்ன காவல் ஆய்வாளர்..

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies