RECENT NEWS

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

Apr 27, 2025

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

Apr 27, 2025

முகப்பு

விஷம் குடித்த மனைவி..பயத்தால் உயிரை விட்ட கணவன்.. மெல்ல சிதைந்த இருவரது வாழ்க்கை!

Apr 13, 2025 03:11 AM

163

விஷம் குடித்த மனைவி..பயத்தால் உயிரை விட்ட கணவன்..  மெல்ல சிதைந்த இருவரது வாழ்க்கை!

விஷம் குடித்த மனைவி..பயத்தால் உயிரை விட்ட கணவன்.. மெல்ல சிதைந்த இருவரது வாழ்க்கை!

குடும்பத்தகராறு காரணமாக கணவன் - மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கீதா. இவருக்கும், திருச்சி கொட்டாம்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் உறவினரான நந்தகுமார் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகு நந்தகுமார், சரிவர வேலைக்கு செல்லாததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கீதா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து சமூகரெங்கபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இதனால் மனைவியை பார்க்க சமூகரெங்கபுரத்திற்கு வந்து சென்ற நந்தகுமார் அங்கேயே வேலை செய்துவிட்டு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, கோபமடைந்த நந்தகுமார் வீட்டைவிட்டு வெளியே சென்றிருக்கிறார்.

இதில் மனமுடைந்து போன கீதா, வீட்டில் இருந்த தலைக்கு தேய்க்க பயன்படுத்தும், ஹேர்டையை குடித்து வீட்டில் மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. பிறகு இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கீதாவை மீட்டு கள்ளிகுளம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு கீதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நந்தகுமார், மனைவியின் உறவினர்கள் தன்னை ஏதாவது செய்துவிடுவார்கள் என்றும், போலீசாரும் விசாரணைக்கு அழைத்து சென்று விடுவார்கள் என்ற பயத்தில் வீட்டுக்குள் சென்று, மனைவியின் சேலையால் தூக்கிட்டு உயிரை மாய்த்து செய்து கொண்டார்.

பின்னர், இச்சம்பவம் குறித்து ராதாபுரம் போலீசார் வழக்கு பதிந்து உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக கணவன்-மனைவி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு..!
  சந்தேகத்தால் ஒரு கொலை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies