பேருந்தில் இளம்பெண்ணை கிண்டல் செய்த இளைஞரை அடித்து உதைத்த பெண்ணின் சகோதரன்.. தம்பியை மீட்க வந்த அண்ணன் படுகொலை

0 2667

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பேருந்தில் தங்கையை செல்போனில் படம் பிடித்து கிண்டல் செய்த நபரை தாக்கியதில் தடுக்க வந்த இளைஞரின் அண்ணன் கொலை செய்யப்பட்டார்.

ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி செல்லும் தனியார் பேருந்தில்  சென்றுகொண்டிருந்தார். அதே பேருந்தில் பயணித்த கபிரியேல்புரத்தை சேர்ந்த தாமஸ் எடிசன் என்ற இளைஞர் அந்த பெண்ணை செல்போனில் படம் பிடித்து கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி தனது அண்ணன் குப்புசாமியிடம் அந்த பெண் செல்போனில் தகவல் தெரிவிக்க, குப்புசாமி தனது நண்பர்களுடன் வந்து கபிரியேல்புரம் பேருந்து நிறுத்தில் இறங்கிய தாமஸ் எடிசனை மடக்கி பிடித்து தாக்கியுள்ளனர்.

அங்கிருந்து காவல் நிலையம் அழைத்துச் செல்வதாக கூட்டிச் சென்று எடிசனை மாந்துரை பகுதியில் வைத்து தாக்கியதாகவும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து தம்பி மீதான தாக்குதலை தடுத்த எடிசனின் சகோதரர் லூர்து ஜெயக்குமாரும் தாக்கப்பட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த லூர்து ஜெயக்குமார் உயிரிழந்த நிலையில், கொலை வழக்கு பதிவு செய்த லால்குடி போலீசார், குப்புசாமியை கைது செய்து அவரது நண்பர்கள் இருவரை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments