RECENT NEWS

திருச்செந்தூர் கோவிலில் ஞாயிறு விடுமுறையையொட்டி குவியும் பக்தர்கள்

திருச்செந்தூர் கோவிலில் ஞாயிறு விடுமுறையையொட்டி குவியும் பக்தர்கள்

Jul 13, 2025

திருச்செந்தூர் கோவிலில் ஞாயிறு விடுமுறையையொட்டி குவியும் பக்தர்கள்

திருச்செந்தூர் கோவிலில் ஞாயிறு விடுமுறையையொட்டி குவியும் பக்தர்கள்

Jul 13, 2025

BIG STORIES

காதலுக்கு கட்டபஞ்சாயத்து.. ரூ.500 கோடி சொத்துக்காக கடத்தல் - ஏ.டி.ஜி.பி கைது..! போலீசில் சிக்க வைத்த அந்த தடயம்

Jun 17, 2025 02:10 AM

271

காதலுக்கு கட்டபஞ்சாயத்து.. ரூ.500 கோடி சொத்துக்காக கடத்தல் - ஏ.டி.ஜி.பி கைது..! போலீசில் சிக்க வைத்த அந்த தடயம்

காதலுக்கு கட்டபஞ்சாயத்து.. ரூ.500 கோடி சொத்துக்காக கடத்தல் - ஏ.டி.ஜி.பி கைது..!

தேனியை சேர்ந்த செல்வந்தர் வனராஜா என்பவரின் மகள் விஜஸ்ரீயும், திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞரும் இன்ஸ்டாகிராமில் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஏப்ரல் மாதம் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார்.

பெண்ணின் அப்பா வனராஜா வசதி படைத்தவர் என்பதால், 500 கோடி சொத்துக்கு அதிபதியான தனது மகள் விஜயஸ்ரீ சாதாரண குடும்பத்தில் வாழ்வது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் வெள்ளவேடு காவல் நிலையத்தில் ஆஜரான விஜயஸ்ரீ தனக்கு சொத்து ஏதும் வேண்டாம், எக்காலத்திலும் உங்கள் வீட்டிற்கு வரமாட்டேன் என்று 3 முறை எழுதி கொடுத்து சென்றதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தான் சம்பவத்தன்று களாம்பாக்கம் கிராமத்திற்கு சைரன் வைத்த காரில் சென்ற மர்ம கும்பல் தனுஷின் வீடு புகுந்து விஜயஸ்ரீயை தேடியுள்ளனர். அங்கு அவர்கள் இருவரும் இல்லை என்பதால் தனுஷின் தம்பியான 17 வயது சிறுவனை காரில் கடத்திச்சென்றதாக கூறப்படுகின்றது.

போலீசில் அளித்துள்ள புகாரில் சைரன் வைத்த காரில் சிறுவன் கடத்தப்பட்டது தெரியவந்ததால் இந்த வழக்கு விசாரணையை வடக்கு மணடல ஐஜி அஸ்ராகார்க் நேரடியாக கண்காணித்தார்.

இந்த வழக்கில் விசாரணையை முன்னெடுத்த திருவாலங்காடு போலீசார் , பெண்ணின் தந்தை வனராஜா, முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரி, வழக்கறிஞர் சரத்குமார், பிரபாகரன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து அவர்களது காரில் இருந்து 6 லட்சம் ரூபாய் கைப்பற்றினர். விசாரணையில் மகேஸ்வரி மற்றும் சரத்குமார் கொடுத்த தகவலின் பேரில் ஏ.டி.ஜி.பி ஜெயராம் மற்றும் பூவை ஜெகன்மூர்த்தியின் தொடர்பு தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

எவ்வளவு செலவானாலும் தன்னுடைய மகளை தனுஷிடமிருந்து பிரித்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல வனராஜா முடிவு செய்திருக்கிறார். இதனால் அவர், காவல்துறையில் போலியான சாதி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த புகாரில் பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவல் உதவி ஆய்வாளரான மகேஸ்வரி என்பவரை அணுகியதாக கூறப்படுகின்றது.

மகேஸ்வரிக்கு பணி காலத்தில் ஏ.டி.ஜி.பி ஜெயராம் முன்னரே தெரியும் என்பதால், பெண்ணின் தந்தையுடன் சென்று ஜெயராமை சந்தித்து உதவி கேட்டுள்ளார். அவரது சிபாரிசின் பெயரில் அவரது சைரன் வைத்த காரிலேயே சென்று பெண்ணின் தந்தை உள்ளிட்டோர், திருவள்ளூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து புரட்சிபாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியை சந்தித்ததாகவும், அவரது ஆதரவாளர்கள் சிலருடன் சென்று களாம்பாக்கத்தில் உள்ள தனுஷ் வீட்டுக்கு சென்று சிறுவனை கடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். சைரன் வைத்த கார் ஓட்டலில் சென்று நின்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. இது இந்த வழக்கின் முக்கிய தடயமானது

இதன் அடிப்படையிலேயே முன் ஜாமீன் மனு விசாரணையின் போது ஜெகன் மூர்த்தியை கட்டபஞ்சாயத்து செய்வதா எம்.எல்.ஏவின் வேலை ? என்று கடுமையாக எச்சரித்த நீதிபதி வேல்முருகன், தவறான நபருடன் 1 லட்சம் பேர் வந்தாலும் தூக்குவேன் என்றார். முழுக்க முழுக்க ஜெகன் மூர்த்தியை ஒரு பிடி பிடித்த நீதிபதி, சைரன் வண்டியை கொடுத்தனுப்பி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ஏ.டி.ஜி,பி ஜெயராமனை கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீஸ் சீறுடையில் இருந்த ஏ.டி.ஜி.பி ஜெராமனை கைது செய்து அழைத்துச்சென்றனர். பூவை ஜெகன் மூர்த்தி , நீதிபதி சொன்ன நேரமான 2;30 மணிக்கு வராமல் தாமதமாக வந்ததே அவர் மீது நீதிபதி ஆவேசம் கொள்ள காரணமாக சொல்லப்படுகின்றது.

கர்நாடக மாநிலம் ராம நகரம் பகுதியைச் சேர்ந்தவரான ஜெயராம் IPS. கன்னட மொழியில் முதுகலை பட்டம் பெற்றவர், 34 வயதில், 1996 ஆம் ஆண்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆனார்.

நாட்டையே உலுக்கிய கோவை குண்டு வெடிப்புக்கு பிறகு, ஏ.எஸ்.பி.,யாக கோவையில் தனது ஐ.பி.எஸ் பணியை துவங்கினார் ஜெயராம். அதன் பின் எஸ்.பி.,யாக நாமக்கல் மாவட்டம், தர்மபுரி மாவட்டத்திலும் பணிபுரிந்துள்ளார்.
பின்னர் டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்று வேலூர், தஞ்சாவூர், கோவை சரக்கங்களில் டிஐஜி.,யாகவும் சென்னை காவல்துறையில் வடக்கு இணை ஆணையராகவும் பணி புரிந்துள்ளார்.

அதன் பின்பு ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்று மேற்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலங்களின் ஐ.ஜி.,யாகவும் சென்னை காவல் துறையில் வடக்கு மண்டல கூடுதல் ஆணையராகவும் பணிபுரிந்துள்ளார்.

இதன் பிறகு ஏ.டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்று தமிழக காவல்துறையின் ஆபரேஷன் ஏ.டி.ஜி.பி.,யாகவும், குற்ற ஆவண காப்பக ஏ.டி.ஜி.பி.,யாகவும் பணிபுரிந்தார். தற்போது ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி.,யாக பணி புரிந்து வந்தார். அடுத்த ஆண்டு மே (2026 - May) மாதத்துடன் இவர் ஓய்வு பெறக்கூடிய சூழ்நிலையில், தற்போது இவர் சிறுவன் கடத்தல் வழக்கில் சிக்கி உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் உயர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சீருடையுடன் கைது செய்யப்பட்ட முதல் ஐபிஎஸ் அதிகாரி ஜெயராம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் புகார் அளித்தவர் புகாரை வாபஸ் பெற்றதை சுட்டிக்காட்டியும் நேரடியாக தொடர்பு இலை என்பதாலும் அவரை ஜாமீனில் விடுவிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

குடும்பமா? நாடா? வம்பிழுக்கிறாரா கம்பீர் ? கோலிக்கு  ஆதரவாக களமிறங்கிய 'சின்ன தல'
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies