பாலாற்று மேம்பால பணிகள் நிறைவு-நாளை முதல் வழக்கம் போல் மேம்பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்

0 5632

செங்கல்பட்டு அருகே பாலாற்று மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து, நாளை முதல் அதில் வழக்கமான போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.

செங்கல்பட்டு அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றின் குறுக்கே கடப்பட்ட 2 மேம்பாலங்கள் பழுதடைந்ததை அடுத்து, கடந்த மாதம் முதல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதைத் தொடர்ந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

இரு பாலங்களில் ஒரு பாலம் சீரமைக்கப்பட்டு அதில் சென்னை - திருச்சி மார்க்கமாக ஒருவழிப் பாதையாக போக்குவரத்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இரண்டாவது பாலத்திலும் சீரமைப்பு பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து நாளை மாலை முதல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments