RECENT NEWS

பேருந்து நிலையத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்து.. தட்டி கேட்டவருக்கு மிரட்டல்

முகப்பு

"கார் கண்ணாடியை Open பன்றா..." டூரிஸ்ட்டை விரட்டிய சாக்லேட் வியாபாரிகளின் அட்ராசிட்டி வீடியோ!

May 27, 2025 04:18 PM

232

"கார் கண்ணாடியை Open பன்றா..." டூரிஸ்ட்டை  விரட்டிய சாக்லேட் 
வியாபாரிகளின் அட்ராசிட்டி வீடியோ!

கார் கண்ணாடியை Open பன்றா... டூரிஸ்ட்டை விரட்டிய சாக்லேட் வியாபாரிகளின் அட்ராசிட்டி!

“காரை கடை எதிர்ல நிறுத்திட்டு சாக்லேட் வாங்கமாட்டியா? கார் கண்ணாடியை திறடா” என்கிற ரீதியில், ஆவேசமாக ஓடிவந்து, கார் கண்ணாடியை ஒருவர் கையால் குத்தி உடைக்க முயற்சிப்பதும், இன்னொருவன் சீறி பாய்ந்து ஓடிவந்து, காலால் காரை எட்டி உதைப்பது, காரின் முன் கண்ணாடியை கையால் அடித்து உடைப்பதுபோல் குத்திவிட்டு, சைடு கண்ணாடியை திருப்பி உடைப்பது... என கொடைக்கானலில் குடும்பத்துடன் வந்த டூரிஸ்ட் ஒருவருடன், அட்ராசிட்டியில் ஈடுபடும் பதறவைக்கும் காட்சிதான் இது...



தமிழ்நாட்டின் மலைகளின் இளவரசியாக விளங்குவதுதான், கொடைக்கானல் சுற்றுலா தலம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், கடந்த மே 23 ஆம் தேதி, திருச்சி சுற்றுலாப்பயணியான மனோ சித்தார்த்தன் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துள்ளார்.




பின்பு, வத்தலக்குண்டு மலைச்சாலை வழியாக செல்லும்போது, பெருமாள்மலை அருகே சாக்லெட் மற்றும் பழக் கடைகள் முன்பு வாகனத்தை நிறுத்தி, பழங்கள் வாங்க முற்பட்டுள்ளார். அப்போது, சாக்லேட் கடைப் பணியாளர்கள் என கூறிக்கொண்டு, “சாக்லேட் வாங்குறதுன்னா இங்க நிறுத்தி வாங்குங்க. பழம் வாங்குகிறவர்கள், இங்கே காரை நிறுத்தக்கூடாது. தள்ளி நிறுத்துங்கள்” என்கிற ரீதியில், சுற்றுலா பயணியான மனோ சித்தார்த்தனுடன் வாக்குவாதத்தில், ஈடுபட்டதாக கூறப்படுகிறது.



இதனால், கடைக்கு சென்ற சுற்றுலாப்பயணி, பழங்களோ சாக்லேட்டோ எதுவும் வாங்காமல் திரும்பியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சுற்றுலா பயணி மனோ சித்தார்த்தன், தனது காரை எடுத்துக்கொண்டு செல்ல முயற்சித்தபோது, பெருமாள்மலை பகுதியில் உள்ள சாக்லெட் கடை பணியாளர்கள், சுற்றுலாப்பயணியின் வாகனத்தை பின் தொடர்ந்து வந்து, வாகனத்தை தடுத்து நிறுத்தி, கைகளால் அடித்து, உடைத்து, ஆபாச வார்த்தைகளால் திட்டி, “சாக்லெட் வாங்கமால் போகிறாயா?” என வன்முறையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



சாக்லெட் கடை பணியாளர்கள் செய்த அடாவடி தனத்தை, சுற்றுலாப்பயணியின் குடும்பத்தார் செல்போனில் வீடியோ பதிவுசெய்து, கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பெருமாள்மலையை சேர்ந்த 35 வயது முகமது அயுப்கான், பெருமாள்மலை அடுக்கத்தைச் சேர்ந்த 17 வயது மற்றும் 16 வயது சிறுவன்கள் உள்ளிட்ட மூவரை கொடைக்கானல் காவல் துறையினர் கைது செய்தனர்.



இந்நிலையில், இதுகுறித்து கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் மதுமதி கூறும்போது, “இதுபோன்று சுற்றுலாப்பயணிகளை அச்சுறுத்துவது, தவறு. சுற்றுலா பயணிகளை வரவேற்க வேண்டும். வியாபாரிகள், உள்ளூர் பொது மக்கள், உணவு விடுதி பணியாளர்கள் இப்படி ஈடுபடக்கூடாது. மீறி இதுபோன்று தகராறில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.



மேலும், கொடைக்கானல் காவல்துறை மூலம் புகார் அளிக்க ஏரிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கியூ ஆர் கோடு வைக்கப்பட்டுள்ளது. இதில், சுற்றுலாப்பயணிகள் புகார் அளிக்கலாம். மேலும் உணவு விடுதிகளுக்கு, கடைகளுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் நிறுத்த இடம் இருந்தால் வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். வரக்கூடிய சுற்றுலாப்பயணிகளும் முறையான, இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ராசி இல்லாத டீமா..? வாயை அடைத்த  பவுமா கிழித்து தொங்கவிட்ட ஹெய்டன்...

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies