BIG STORIES
தவெக பெண் தொண்டர் பூட்ஸ் காலால் உதைத்து கொடூரமாக தாக்கப்பட்டாரா?.. அங்கு நடந்தது என்ன ?
May 28, 2025 02:28 AM
289
தவெக பெண் தொண்டர் பூட்ஸ் காலால் உதைத்து கொடூரமாக தாக்கப்பட்டாரா?
சென்னையில் தவெக பெண் நிர்வாகிகளை போலீசார் தாக்கியதாக எழுந்துள்ள புகார் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி விட்டிருக்கிறது...
அனுமதி இல்லாமல் கூட்டம் கூட்டி ஆர்ப்பாட்டமும் போராட்டமும் செய்வதுதான் தவறு என்றால் உதவி செய்வதும் தவறா ? எதற்காக போலீசார் தவெக வினரை அவ்வளவு வெறி கொண்டு விரட்ட வேண்டும் என்ற கேள்வி தான் பலரது மனதில் எழுகின்றது...
செவ்வாய்கிழமை மாலை வியாசர்பாடி முல்லை நகர் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 15 மேற்பட்ட வீடுகள் முற்றிலும் எரிந்து, 30 குடும்பங்கள் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக தொண்டர்கள் தங்கி இருந்த மையத்தில் இரவு உணவு வழங்கியதாகவும், உணவு வழங்கும் போது திடீரென ஒரு குழு காவலர்கள் உள்ளே நுழைந்து உணவு வழங்குவதைத் தடுத்ததாக கூறப்படுகிறது.
தவெக தொண்டர்கள் வெளியேறியபோதும் ,TVK வடசென்னை பெண் நிர்வாகி கங்காவதி (39) காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பியதாகவும், ஒரு காவல் ஆய்வாளர் அவரது வயிற்றில் உதைத்ததில் வலிப்பு ஏற்பட்டதாக கூறி தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.
தமிழ்செல்வி எனும் தவெக தொண்டரின் ஆடையை கிழித்து அடித்தாக காவல் துணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல் துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக த வெ க தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் தங்கள் கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எடுக்காவிட்டால் தமிழகம் அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியதிருக்கும் என்றும் விஜய் எச்சரித்து இருந்தார்.
இந்த நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் த.வெ.க நிர்வாகிகளான தமிழ்செல்வி மற்றும் கங்காவதி ஆகியோரை த.வெ.க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது த.வெ.க தலைவர் விஜய் சிகிச்சை பெற்று வரும் பெண்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்பது குறித்து கேட்டறிந்து நலம் விசாரித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த், வியாசர்பாடியில் த.வெ.க நிர்வாகி பெண்களை காவல்துறையினர் தாக்கியுள்ள சம்பவம் கண்டித்தக்கது எனவும் இது தொடர்பாக தலைவரும் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்ததாகவும் தமிழக அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்,
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எப்போதும் கட்சியும், தலைவரும் உறுதுணையாக இருப்பார் என்பதை அவர்களிடம் தெரிவித்ததாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
காவல்துறை தாக்கவில்லை என மறுப்பு தெரிவித்த தகவலுக்கு பதிலளித்த ஆனந்த், அப்புறம் சும்மாவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிடி ஸ்கேன், ஆப்ரேஷன் நடந்த இடத்திலே பூட்ஸ் காலால் மிதித்த தடம் உள்ளது, இது தான் அரசின் நிலை என குற்றம் சாட்டினார்
தமிழக வெற்றி கழகம் என்றாலே அவர்களுக்கு பயம் உள்ளது, இது தொடர்பாக தெளிவான அறிக்கையை தலைவர் கொடுத்துள்ளார்.
வியாசர்பாடியில் நடந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகம் உட்பட 9 இடங்களில் த வெ க சார்பில் புகார் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வியாசர் பாடியில் நடந்த சம்பவம் தொடர்பாக சென்னை காவல்துறை விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் குடிசை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு சில அமைப்பின் நிர்வாகிகள் காவல் துறையினரால் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளின் தொடர்ச்சியாக மற்றும் பாதிக்கப்பட பேரில் சென்னை இணை ஆணையாளர் அவர்கள் கொடுத்த அறிக்கையின்படி, செய்திகளில் வெளியானது போன்று காவல்துறையினரால் மேற்படி அமைப்பின் நிர்வாகிகள் தாக்கப்பட்டதாக தெரியவரவில்லை. மேலும், அவ்விசாரணையில் ஒருசிலர் அவர்கள் சார்ந்த கட்சியில் அங்கீகாரம் பெறுவதற்காக உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பரப்பி வருவதாகத் தெரியவருகிறது.
இருப்பினும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள துணை ஆணையாளர் (குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு) நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு இடையே தங்களை நிவாரண உதவி வழங்க விடாமல் போலீசார் விரட்டி தாக்கிய காட்சிகளை தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர்.
அரசியலில் போட்டி இருக்கலாம் பொறாமை இருக்கக் கூடாது என்று சுட்டிக் காட்டும் தமிழக வெற்றி கழகத்தினர் தங்களின் வளர்ச்சி பிடிக்காமல் இது போன்ற செயல்களை போலீசார் மூலம் தூண்டிவிட்டு சிலர் செய்வதாக மற்றும் தட்டி இருக்கின்றனர்.
தானாக செய்தாலும் பிறர் தூண்டுதலின் பேரில் செய்தாலும் குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu