BIG STORIES
நாராயணா... நாராயணா... மூதாட்டியின் அபயக்குரல் உயிரை காத்த பெண்..! தனியாக வசிக்கும் பெண்களே உஷார்..
May 27, 2025 05:02 AM
377
நாராயணா... நாராயணா... மூதாட்டியின் அபயக்குரல் உயிரை காத்த பெண்..! தனியாக வசிக்கும் பெண்களே உஷார்..
சென்னை மயிலாப்பூரில் வீட்டில் தனியாக இருந்த 81 வயது மூதாட்டியை கத்தரிக்கோலால் குத்தி கழுத்தை நெரித்து தங்க நகைகளை கொள்ளை அடித்த பெண்ணை இளம்பெண் ஒருவர் மடக்கி பிடித்தார்.
சென்னை மயிலாப்பூர் கேசவப் பெருமாள் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் 81 வயது மூதாட்டி ராஜேஸ்வரி.
கணவர் உயிரிழந்து விட்ட நிலையில் மூதாட்டி வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் ராஜேஸ்வரி வசிக்கும் வீட்டின் முதல் தளத்தில் வசித்து வரும் ரேவதி என்ற மூதாட்டியை உடனிருந்து கவனித்து கொள்வதற்காக அரியலூரைச் சேர்ந்த 54 வயது இந்திரா என்பவர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதமாக அங்கு வேலை செய்து வந்த இந்திரா, அடிக்கடி கீழ் தளத்தில் வசித்து வரும் மூதாட்டி ராஜேஸ்வரி வீட்டிற்கும் சென்று பேசுவது, பழகுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில் திங்கட்கிழமை மாலை 3 மணி அளவில் மூதாட்டி ராஜேஸ்வரியின் வீட்டில் யாரும் இல்லை, அவர் மட்டும் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு இந்திரா அங்கு சென்றுள்ளார்.
மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்தபடியே குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கூறியுள்ளார்.
சமையல் அறையில் தண்ணீர் எடுக்க சென்றபோது, பின்தொடர்ந்து நடந்து சென்ற இந்திரா கத்திரிக்கோலால் மூதாட்டி ராஜேஸ்வரியை தாக்கி கீழே சாய்த்ததாகக் கூறப்படுகின்றது.
மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலி, வளையல்கள் மற்றும் வைர கம்மலை கொள்ளையடித்துள்ளார்.
அப்போது கத்திரிக்கோலால் வாயில் குத்த முயன்றதால், வலிதாங்காமல் அலறி துடித்த மூதாட்டி ராஜேஸ்வரி "நாராயணா, நாராயணா..." என கூச்சலிட்ட நிலையில், சத்தம் கேட்டு அங்கு வந்த பக்கத்து வீட்டுப்பெண் வைஷ்ணவி மற்றும் அவரது சகோதரர் பிரசன்னா ஆகியோர் இந்திராவை மடக்கிப் பிடித்தனர்.
மூதாட்டி கழுத்தில் காலை வைத்து நெரித்தபடி, கையில் கத்திரிக்கோலோடு மூதாட்டியை குத்திக்கொண்டு இருந்த இந்திராவைக் கண்டு என்ன செய்கிறாய் எனக் கேட்டுள்ளனர்.
தான் மூதாட்டியை காப்பாற்ற வந்ததாகவும், வேறு ஒருவர் நகைகளை கொள்ளையடித்து சென்றதாகவும் இந்திரா நாடகமாடி உள்ளார்.
மூதாட்டியின் உடலில் ரத்தம் காணப்பட்டதால், இந்திரா மீது சந்தேகம் வலுத்தது, அவரை பிடித்து வைத்துக் கொண்டு இது குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் மூதாட்டியின் மகன் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்தார்.
முதலில் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இந்திராவை பிடித்து அங்கிருந்த பெண்களை வைத்து சோதனை செய்தபோது, நகைகள் ஏதும் இல்லை. மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் மற்றும் பெண் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் வந்து இந்திராவிடம் விசாரணை மேற்கொண்டதில் ஒரு நபர் தாக்கி விட்டு நகைகளை திருடி விட்டு ஓடியதாகவும், வாய் கட்டியபடி மூர்ச்சையாகி இருந்தவரை கத்திரிக்கோல் கொண்டு வாயை திறந்து தண்ணீர் ஊற்றியதாகவும் தெரிவித்தார்.
இந்திர மீது சந்தேகம் கொண்டாலும் அவர் கூறுவது உண்மைதானா என்பதை அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்த போது இந்திராவை தவிர யாரும் வீட்டிற்குள் வராததை உறுதி செய்தனர்.
இந்திராவை பெண் உதவி ஆய்வாளரை கொண்டு முழுவதும் சோதனை செய்தபோது பாவாடை நாடாவில் நகைகளை சொருகி மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கொள்ளையடித்த சுமார் 12 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார், கைதான இந்திராவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய வைஷ்ணவி கூறும்போது, பாட்டியம்மா வீட்டுக்குள் யார் வந்து செல்கிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருப்பதை தாங்கள் வழக்கமாக வைத்திருந்த நிலையில், பணிப்பெண் இந்திரா உள்ளே சென்ற சிறிதுநேரத்தில் சத்தம் கேட்டதால் சந்தேகத்துடன் வந்ததாகவும், அவர் வணங்கும் நாராயணன் தான் அவரது உயிரை காப்பாற்றி உள்ளார் என்றும் தெரிவித்தார்.
பைட் ((வைஷ்ணவி, காப்பாற்றிய பெண்))
மூதாட்டியின் உயிரை மீட்ட பெண்ணிற்கும், போலீசாருக்கும் அவரின் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
வீட்டில் தனியாக உள்ள முதியவர்களை கண்காணிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ள நிலையில் மேல் வீட்டில் உள்ள மூதாட்டியை கவனிக்க ஏஜென்சி மூலமாக கேர் டேக்கராக வந்த பெண்ணே நகைக்காக கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!
Jun 22, 2025
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu