RECENT NEWS

கணவனுடன் பைக்கில் சென்ற புதுமணப்பெண்ணை சினிமா பாணியில் கடத்திய முன்னாள் காதலன்

BIG STORIES

ஊரு விட்டு ஊரு வந்து.. காதல் செய்த இளைஞருக்கு கன்னம் பழுக்க பழுக்க அடி ..!

May 28, 2025 01:55 AM

254

ஊரு விட்டு ஊரு வந்து.. காதல் செய்த இளைஞருக்கு கன்னம் பழுக்க பழுக்க அடி ..!

ஊரு விட்டு ஊரு வந்து.. காதல் செய்த இளைஞருக்கு கன்னம் பழுக்க பழுக்க அடி ..!

சென்னை மறைமலைநகர் பகுதியில் வாடகைக்கு குடியிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் மாயமான நிலையில் அவரை இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் அடித்து உதைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பேரமனூர் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது வீட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அசாம் மாநிலத்தை சேர்ந்த சேர்ந்த இஜாஹரூல் இஸ்லாம் என்பவர் தனியாக வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

இவர் மறைமலைநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இஜாஹரூல் மாதாமாதம் 25ஆம்தேதி வீட்டு வாடகை பணத்தை முன்கூட்டியே கொடுத்துவிடுவார்.

அதனால் 25ஆம்தேதி காலை அவரை வீட்டில் பார்த்தபோது வீடு பூட்டியிருந்தது. அவர் வீட்டில் இல்லை என்பதால் 25ஆம்தேதி காலை இஸ்லாமிடம் தொலைபேசியில் பேசி வாடகை தரலையே என கேட்டதற்க்கு நான் தாம்பரத்திற்கு நண்பரின் வீட்டுக்கு வந்தேன். என்னை இங்கே சரமாரியாக தாக்குகிறார்கள் என அழுதுகொண்டே இஸ்லாம் பேசி உள்ளார்.

அதன் பின்னர் இஸ்லாமின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யபட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த ரமேஷ் வீட்டு உரிமையாளர் என்கிற முறையில் வீட்டில் வாடகைக்கு இருந்தவரை காணவில்லை என்றும் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தன்னை நான்கைந்து பேர் சேர்ந்து சரமாரியாக தாக்குவதாக கூறிய அடுத்த நிமிடங்களில் போன் சுவிஃட்ச் ஆஃப் செய்யப் பட்டது குறித்தும் மறைமலைநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் மறைமலைநகர் போலீசார் செல்போன் டவரை வைத்து சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று அங்கு விசாரித்த போது இஸ்லாம் அங்கு வந்ததாகவும் இரவே அசாமிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுவிட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் இஸ்லாமிற்கும் தாம்பரத்தில் உள்ள அசாமைச் சேர்ந்த திருமணமான பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், இது அந்த பெண்ணின் கணவருக்கு தெரிந்ததும் , அந்த பெண்ணை வைத்தே பேசி இஸ்லாமை தனது வீட்டுக்கு வரவழைத்து அடி வெளுத்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இரண்டு பெண்கள் இரண்டு அசாம் மாநில ஆண்கள் சேர்ந்து இஸ்லாமை மாறி மாறி அடிக்கும் வீடியோ வலைதளத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் இரு பெண்கள் கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டும் ஒரு ஆண் சரமாரியாகவும் இஸ்லாமை தாக்கிய காட்சிகள் இடம் பெற்றிருந்தது

இதற்கிடையில் மாயமான இஸ்லாம் குறித்து எந்த தகவலும் இல்லாததால் அவர் எங்கு சென்றார்..? என்னவானார் ? அசாமிற்கு சென்றாரா.. அல்லது கள்ளக்காதல் விவகாரத்தால் இஸ்லாமிற்கு வேறு ஏதாவது விபரீதம் ஆகியிருக்குமோ என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் வீடியோ காட்சிகள் அடிப்படையில் இஸ்லாமை தாக்கிய இரண்டு அசாம் மாநில இளைஞர்களை மறைமலைநகர் போலீசார் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

காதலுக்கு கட்டபஞ்சாயத்து.. ரூ.500 கோடி சொத்துக்காக கடத்தல் - ஏ.டி.ஜி.பி கைது..! போலீசில் சிக்க வைத்த அந்த தடயம்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies