தமிழ்நாடு
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது கார்த்திகை மகா தீபம்
Dec 03, 2025 04:28 PM
26
கார்த்திகை தீபத்திருநாளையொட்டி திருவண்ணாமலையில் மகா தீபம் வெகுவிமர்சையாக ஏற்றப்பட்டது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோவிலில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.
ஜோதி வடிவாய் காட்சித் தந்த சிவனை "அண்ணாமலையாருக்கு அரோகரா" என விண்ணதிர கோஷம் எழுப்பியபடி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
மலையே மகேசன் என போற்றப்படும் திருவண்ணாமலையில் உள்ள மலை உச்சியில் கடும் பனி மூட்டத்திற்கு இடையே மாலை 6 மணியளவில் தீபம் ஏற்றப்பட்டது.
மகா தீபம் ஏற்றப்பட்டபோது கோயிலின் கோபுரங்கள் மின்னொளியில் ஜொலித்தன. வாண வேடிக்கைகள் வானில் ஜாலம் நிகழ்த்தின.
திருவண்ணாமலையில் கிரிவலமாக சென்றும் அண்ணாமலையாரை பல்லாயிரக்கணக்கானோர் வழிபட்டனர். மகா தீபத்தை காண வந்தவர்கள் பவுர்ணமி கிரிவல வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.
முன்னதாக, தங்கக் கொடி மரம் முன்பு தீப தரிசன மண்டபத்தில் மாலையில் சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். அதன்பிறகு உமையவளுக்கு தனது இடபாகத்தை அளித்து அர்த்தநாரீஸ்வரராக அண்ணாமலையார் எழுந்தருளினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu