RECENT NEWS

உலகின் மிகச் சிறந்த பி-2 விமான வடிவமைப்புக்கு உதவிய இந்தியர்! 32 ஆண்டுகள் சிறையில் இருக்கும் பின்னணி

BIG STORIES

ஓயாத தோட்டத்து வீட்டு திகில்.. கத்தியால் வாயை கிழித்துமூதாட்டி கொடூர கொலை..! நகையை கேட்டு கொள்ளையர் அட்டூழியம்

Jun 09, 2025 01:20 AM

250

ஓயாத தோட்டத்து வீட்டு திகில்.. கத்தியால் வாயை கிழித்துமூதாட்டி கொடூர கொலை..!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள சித்தம்பூண்டி கிராமம், குளத்துப்பாளையம் பகுதியில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து மூதாட்டியை நகைக்காக , கத்தியால் வாயை கிழித்து கொள்ளையர்கள் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை கொண்ட கொங்கு மண்டலத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வரும் முதியவர்கள் நகை பணத்துக்காக அடுத்தடுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டும் சம்பவம் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வரும் முதியவர்களை அச்சம் கொள்ள செய்தது.

சில தினங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சிவகிரியில் தனியாக வசித்து வந்த கனவன் மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேங்காய் பறிக்கும் வேலைக்காக வந்த 3 பேரையும் , நகையை வாங்கியதாக நகைகடைகாரரையும் போலீசார் கைது செய்தனர். அதே நபர்கள் தான் பல்லடம் அருகே தோட்டத்து வீட்டில் நடந்த 3 பேர் கொலையிலும் தொடர்புடையவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள சித்தம்பூண்டி கிராமம் குளத்துப்பாளையம் பகுதியில் சனிக்கிழமை இரவு மூதாட்டி ஒருவர் நகைக்காக கத்தியால் வாயை கிழித்து கொடூரமாக தாக்கிக் கொல்லப்பட்டுள்ளார்.

சாமியாத்தாள் என்ற 67 வயதான அந்த மூதாட்டிக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் கிருஷ்ணவேணி என்ற மகளும் உள்ளனர்.

தனது கணவர் ராசப்பன் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் அந்த தோட்டத்து வீட்டில் தங்கி விவசாயம் பார்த்து தனது மகன் மற்றும் மகளை படிக்க வைத்து நல்ல வரன் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார்.

மகன் கிருஷ்ணமூர்த்தி IT நிருவனத்தில் வேலைபார்ப்பதால், குடும்பத்துடன் கோவையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். மகள் கிருஷ்ணவேணி திருமணம் ஆகி மணியனூரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த சாமியாத்தாள் சனிக்கிழமை மாலை உறவினரின் திருமணத்திற்கு சென்று விட்டு இரவு சுமார் 9 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்தார்.

திருமண வீட்டிற்க்கு தான் அணிந்து சென்றிருந்த 10 பவுன் தங்க சங்கிலியை கழட்டி மறைவான இடத்தில் பத்திரமாக வைத்து விட்டு , மூதாட்டி சாமியாத்தாள் வீட்டின் வெளியே வாசலில் கட்டிலில் படுத்து தூங்கினார்.

இந்நிலையில் நள்ளிரவில் தோட்டத்திற்குள் புகுந்த இரு மர்ம நபர்கள் மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து நகைபனம் இருக்கின்றதா? என வீட்டிற்குல் தேடியுள்ளனர் .

அவர்களின் கைகளில் ஏதும் சிக்காததால், மூதாட்டியை எழுப்பி கத்தியை காண்பித்து மிரட்டி நகை பணத்தை எடுத்துக் கொடுக்கும்படி மிரட்டி உள்ளனர். பயந்து போன மூதாட்டி சத்தம் போட்டு கூச்சலிட்டார்.

இதனால் அந்த மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் மூதாட்டியின் கழுத்தை அறுத்துள்ளனர், அவர் கூச்சலிட்டபடியே இருந்ததால் வாய்க்குள் கத்தியை விட்டு கொடூரமாக குத்தி உள்ளனர்.

முகத்திலும் சரமாரியாக குத்திவிட்டு இருவரும் தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மூதாட்டி மெல்ல நகர்ந்து சென்று செல்ஃபோன் மூலம் பக்கத்தில் உள்ள உறவினர்களை அழைத்து இரு திருடர்கள் தன்னை குத்திவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள், மூதாட்டியை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக கோவை உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி சாமியாத்தாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா சேலம் சரக டிஐஜி உமா ஆகியோர் அங்கு ஆய்வு செய்தனர்.

கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்கள் சேகரிக்கப்பட்டது. சிசிடிவி காமிராக்கள் ஏதும் இல்லாததால் கொலையாளிகளை எளிதில் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. பல்வேறு தனிப்படை அமைத்து போலீசார் விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

கொங்கு மண்டலத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் விவசாயி பணம் நகைக்காக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஏங்க.. அந்த பய பேச்சக்கேட்டு கூமாபட்டி ஐலாண்டு போன இன்ஸ்டா ஊர் சுற்றிகள் ஏமாற்றம்..!  “ஏங்க..வராதீங்க..” பொதுப்பணித்துறை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies