மது குடிக்க பணம் தராத தாயை அடித்துக் கொன்ற மகன்
Jun 18, 2025
முகப்பு
கீழ்ப்பாக்கம் மருத்துவமனை 7 மாடி கட்டிடம் இருளில் மூழ்கியது.. நோயாளிகள் அவதி!.. ஒரு ஜெனரேட்டர் வசதி கிடையாதா ?
May 23, 2025 09:02 AM
746
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்னை மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் நோயாளிகள் தினந்தோறும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர் நூற்றுக்கணக்கானேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை 5:30 மணி அளவில் பிணவறைக்கு எதிரே இருக்கும் 7 மாடி கட்டிடத்தில் திடீரென மின்சாரம் தடைபட்டது.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட கட்டிடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து நோயாளிகள் அங்கிருந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவரிடம் முறையிட்டுள்ளனர், ஆனால் அவர்கள் உடனடியாக மின்சாரம் வந்து விடும் என்று கூறியதை தவிர்த்து வேறு எந்த பதிலும் கூறாமல் மௌனமாக இருந்ததாக சொல்லப்படுகிறது..
அங்கே மின்சாரம் இல்லாததால் மின்விசிறி செயல்படவில்லை இதனால் சில நோயாளிகள் புழுக்கத்தால் கடும் அவதிக்குள்ளாயினர் . இது குறித்து அங்கு இருந்த செவிலியர்களிடம் கூறியதும் அவசர அவசரமாக அவர்களை பக்கத்து கட்டிடங்களில் உள்ள சிகிச்சை மையங்களில் மாற்றி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நோயாளிகள் கூறும் போது மாலை 5 மணியிலிருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது நாங்கள் பலமுறை இங்கிருந்த செவிலியர்களிடம் கேட்டோம் ஆனால் இப்போது வந்துவிடும் இப்போது வந்துவிடும் என கூறினார்களே தவிர மின்சாரம் வரவில்லை என்றனர்.
மின்சாரம் தடைபட்ட கட்டிடத்திற்கு வந்த மருத்துவமனை முதல்வர் லியோ டேவிட் கூறும் போது அருகாமையில் கட்டிட வேலை நடைபெறுகிறது, அந்த பணியின் போது தெரியாமல் இந்த கட்டிடத்திற்கு வரும் மின்சார ஒயரை ஜேசிபி இயந்திரம் மூலம் துண்டித்து விட்டனர், ((இன்னும்)) அரை மணி நேரத்தில் மின்சாரம் கொடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார் அத்தோடு இங்கு சிகிச்சையில் உள்ள எந்த உள் நோயாளிக்கும் எந்த பாதிப்பும் இல்லை, அவர்களுக்கு தேவையான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது உரிய சிகிச்சை தேவைப்படுபவர்கள் மற்ற வாடுகளுக்கு மாற்றப்பட்டு அவர்களுக்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
அவர் கூறியது போல அரை மணி நேரத்தில் மின் இணைப்பு வந்தது மின் இணைப்பு வந்த பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமரன் பாதிக்கப்பட்ட கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர் இந்த பகுதியில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மருத்துவமனை டீன் லியோ டேவிட் கூறும்போது இந்த கட்டிடத்தில் இருந்து 23 நோயாளிகளை முன்னதாகவே நாங்கள் வேறு கட்டிடத்திற்கு மாற்றியுள்ளோம் என்றார். ((மீதமுள்ள 70 நோயாளிகள் நாங்களே இங்கு இருக்கிறோம் என்று கூறியதாக நூதன பதிலளித்தார்.))
தலைநகரில் பழமையும் பல நூறு மக்களின் அத்தியாவசியமாகவும் இருக்கக்கூடிய கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இந்த கட்டிடத்தில் மின்சாரம் தடைபட்டால் அதனை ஈடு கட்டும் வகையிலான ஜெனரேட்டர் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த பிரச்சினையை அடுத்து இனி மின்சாரம் தடை பட்டால் மாற்று ஏற்பாடாக மின்சாரம் வழங்குவதற்கு ஜெனரேட்டர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu