இந்தியா
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை - உச்சநீதிமன்றம் அதிரடி
May 22, 2025 10:33 AM
880
உச்சநீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
டாஸ்மாக் தொடர்புடைய இடங்களில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தமிழக அரசுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதனை விசாரித்த தலைமை நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு, டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை வரம்பு மீறி நடப்பதாக குறிப்பிட்டனர்.
முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தலாமே தவிர, ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி அமலாக்கத்துறை விசாரிக்க முயற்சிக்கலாம்? என்றும் கேள்வி எழுப்பினர்.
டாஸ்மாக் வழக்கில் கூட்டாட்சி தத்துவத்தை மீறும் வகையில் அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், நிதி சார்ந்த முறைகேடு எங்கு நடைபெற்றுள்ளது என்பதை அமலாக்கத்துறை கூற முடியுமா? என்றும் வினவினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu