RECENT NEWS

என்னடா செஞ்சீங்க.. 10 ஆம் வகுப்பு மாணவி கர்ப்பமானதால் அதிர்ச்சி..!

தமிழ்நாடு

25 திருமணங்கள் ஆபரேஷன் ‘மாப்ள’ கும்பலின் தலைவி... இப்போ, ‘மாமியார்’ வூட்ல!..

May 21, 2025 04:01 PM

640

25 திருமணங்கள் ஆபரேஷன் ‘மாப்ள’ கும்பலின் தலைவி... இப்போ, ‘மாமியார்’ வூட்ல!..

“ஒன்றா ரெண்டா ஆசைகள்… எல்லாம் சொல்லவே… ஓர் நாள் போதுமா…” என்பதுபோல் ஹஸ்கி வாய்ஸில், காதோரத்தில் பாடிய புதிய மனைவியைக் காணாமல் திடுக்கிட்டுப்போயுள்ளார், புதுமாப்பிள்ளை Vishnu Sharma.

கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் Sawai Madhopur-ல் வசிக்கும் விஷ்ணுஷர்மா, மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த Anuradha Paswan என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள், அழகானவள், அவளுக்கு ஒரு சகோதரன். அவருக்கும் வேலை இல்லை. இதனால், உதவ யாருமே இல்லை என்கிற அடிப்படையில்தான், அனுராதா பஸ்வானின் உறவினர்கள், அவரது புகைப்படங்கள் மற்றும் விவரங்களை வைத்து வரன் தேடினார்கள்.

அதுவும், விஷ்ணு ஷர்மாவுக்கு பார்த்தவுடன் அனுராதா பஸ்வானை பிடித்துவிட்டதால், வரன் பார்த்துக்கொடுத்த திருமண தரகர் பப்பு மீனா என்பவருக்கு, 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார், என்றும் கூறப்படுகிறது.

பிறகு, இருவருக்கும் பிடித்துப்போனதால் கோயிலிலும் வீட்டிலும் மத சடங்குகளின் அடிப்படையில் திருமணம் செய்துகொள்கிறார்கள். “எப்படி வளர்த்திருக்காங்க?” என மெய்ச்சிலிர்க்கும் அளவுக்கு, மணமகன் மற்றும் மாமியாருடன் அன்பாகவும் அப்பாவியாகவும் பழகியுள்ளார், அனுராதா பஸ்வான். மணமகன் குடும்பத்தினர் அத்தனை பேர் மத்தியிலும் “இப்படியொரு பொறுப்பான பெண்ணா?” என வியக்கும் அளவுக்கு பழகி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார், அனுராதா.

ஆனால், அப்படிப்பட்ட, அந்த மனைவியைத்தான் காணாமல் அதிர்ச்சி அடைந்தார், விஷ்ணு ஷர்மா. அவர் மட்டும் காணாமல் போயிருந்தால்கூட எங்கேயோ சென்றிருக்கிறார் அல்லது அவருக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று யோசிக்கலாம். ஆனால், அவருடன் சேர்த்து வீட்டிலிருந்த பணம், நகைகள் மற்றும் பொருட்களையும் காணவில்லை என்பதால், மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானது, புதுமாப்பிள்ளை விஷ்ணு ஷர்மாவின் குடும்பம்!

இதுகுறித்து, விஷ்ணு ஷர்மா கூறும்போது, “டியூட்டி முடித்துவிட்டு இரவு கொஞ்சம் தாமதமாக வந்த நான், இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கினேன். அன்று இரவு எப்போதும் இல்லாத அளவுக்கு தூக்கம் ஏற்பட்டது. எனக்கு தூக்க மாத்திரை கொடுத்ததுபோல் இருந்தது” என கூறியுள்ளார்.

மேலும், திருமணமான இரண்டு வாரங்களுக்குள், அனுராதா பஸ்வான் ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரூ.30,000 பணம் மற்றும் ரூ.30,000 மதிப்புள்ள மொபைல் போனை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றார். "நான் ஒரு கை வண்டி நடத்தி கடன் வாங்கி திருமணம் செய்து கொண்டேன். நான், ஒரு மொபைலையும் லோனில் வாங்கியிருந்தேன். இப்படியெல்லாம் ஏமாற்றிவிட்டு செல்வள் என நான் ஒருபோதும் எதிர்பார்க்கவே இல்லை" என குமுறி வெடித்துள்ளார், விஷ்ணு ஷர்மா.

அதிர்ச்சியடைந்த விஷ்ணு ஷர்மாவின் குடும்பத்தினர், ராஜஸ்தான், சவாய் மாதோபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோதுதான், அனுராதா பஸ்வான் குறித்து திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்துதான் ‘ஆபரேஷன் மாப்பிள்ளை’ என்ற பெயரில் அனுராதாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஏனென்றால், அவர் சாதாரண அனுராதா அல்ல. இதுவரை, இப்படி போலியான 25 திருமணங்களை செய்து மாப்பிள்ளை குடும்பத்தாரை பணம், நகை, பொருட்கள் என கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

அதாவது, “ஒன்றா ரெண்டா ஆசைகள்… எல்லாம் சொல்லவே… ஓர் நாள் போதுமா…” என்பதில், அந்த ஆசைகள் என்பதற்கு பதில் ஒன்றா ரெண்டா கணவன்கள் என்று போட்டுக்கொள்ளும் அளவுக்கு பல ஆண்களை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியுள்ளார், அனுராதா என்பது தெரியவந்தது.

இதனால், ஒரு காவலரையே திருமணத்துக்கு பெண் தேடும் மணமகன் போல் செட்டிங் செய்து, அனுராதா கும்பலை அணுகியிருக்கிறது, காவல்துறை. “சிக்கிட்டான்.... சிக்கிட்டான்...26 வது இளிச்சவாயன் சிக்கிட்டான்...” என குத்தாட்டம் போடாத குறையாய், பல்லிளித்தபடி, வந்த அனுராதா பஸ்வானை, திருமணம் செய்வதுபோல் சென்று, போபாலில் வைத்து கைது செய்து, மாமியார் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளது, காவல்துறை.

32 வயது அனுராதா பஸ்வானின் அழகில், பேச்சில், நடத்தையில் அத்தனையிலும் மயங்கி, திருமணம் செய்துகொண்டு ஏமாந்த, 25 மாப்பிள்ளைகள், ‘ஆபரேஷன் மாப்பிள்ளை’ மூலம் கைது செய்யப்பட்ட அனுராதா மீது புகார் கொடுக்க அணிவகுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சென்னை GH -ல் போலி டாக்டர்... அதிரவைத்த திருட்டு  சம்பவம்; திணறும் போலீஸ்..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies