மக்களின் கடைசி ரூபாயையும் பிடுங்கும் செயல் இது.. தமிழ்நாடு அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

சாலை வரியை 5 சதவீதம் உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தப்படாத சாலை வரியை, தற்போது உயர்த்த முடிவெடுத்திருப்பது, மக்களின் கடைசி ரூபாயையும் பிடுங்கும் செயல் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசின் முடிவு வாகனங்களின் விலையை மேலும் உயர்த்த வழிவகை செய்யும் என்றும், குடும்பத்துடன் செல்ல நான்கு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற சாமான்ய மக்களின் நீண்ட நாள் கனவுக்கு தடை போடும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி திமுக அரசு குறைக்காத நிலையில், தற்போது சாலை வரியை உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Comments