நகை பட்டறையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ தங்கத்தை திருடிவிட்டு தப்பிய வடமாநில ஊழியர்..!

0 2345

கோவையில், நகை பட்டறையில் இருந்து ஒரு கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்ற பட்டறை ஊழியரை சிசிடிவி பதிவுகளை ஆதாரமாக வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

சண்முகா நகரில் உள்ள மோகன் குமார் என்பவரின் தங்க நகை பட்டறையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் மகாராஷ்டிராவை சேர்ந்த பிரமோத் வித்தால் போச்லே என்ற இளைஞர், வேலைக்கு சேர்ந்துள்ளார்.

வழக்கம் போல் கடையின் சாவியை வைக்கும் இடத்தையும், கடை திறக்கும் நேரத்தை நன்றாக அறிந்த பிரமோத், நேற்று பட்டறை திறக்கும் முன் கடையின் சாவியை எடுத்து உள்ளே இருந்த 1 கிலோ அளவிளான தங்க நகை மற்றும் கட்டிகளை திருடுவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதுகுறித்து மோகன் குமார் அளித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments