கொரோனா தொற்று - நாடு முழுவதும் 4 பேர் உயிரிழப்பு
Jun 20, 2025
முகப்பு
ஹோட்டல்கள் பின்பற்ற வேண்டிய 14 வழிகாட்டு நெறிமுறைகள்
Jun 04, 2025 07:14 AM
51
ஹோட்டல்கள் பின்பற்ற வேண்டிய 14 வழிகாட்டு நெறிமுறைகள்
உணவகங்களில் சமைக்கும் எண்ணெயை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் சிக்கன், பஜ்ஜி, கோபி மஞ்சூரியன் உள்ளிட்ட உணவுகளில் செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது எனவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பான 14 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள உணவு பாதுகாப்புத்துறை, அனைத்து உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், டைபாய்டு மற்றும் மஞ்சகாமாலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி மருத்துவ தகுதி சான்றிதழ் பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து வைத்திருக்க வேண்டும், உணவுப் பொருட்களில் ஈக்கள், பூச்சிகள் மெய்க்காத வண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி வைத்து காட்சிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
1.அனைத்து உணவு வணிகர்களும் http://foscos.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பித்து பதிவு சான்றிதழ் பெற வேண்டும்
2.அனைத்து உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம்: உணவு பாதுகாப்புத்துறை
3.டைபாய்டு மற்றும் மஞ்சகாமாலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி மருத்துவ தகுதி சான்றிதழ் பெற வேண்டும்
4.உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து வைத்திருக்க வேண்டும்: உணவு பாதுகாப்புத்துறை
5.உணவுப் பொருட்களில் ஈக்கள், பூச்சிகள் மெய்க்காத வண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி வைத்து காட்சிப்படுத்த வேண்டும்
6.உணவு எண்ணெயை ஒரு முறை மட்டுமே சமைக்க பயன்படுத்த வேண்டும்: உணவு பாதுகாப்புத்துறை
7.நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில் பரிமாறவோ பொட்டலமிடவோ கூடாது: உணவு பாதுகாப்புத்துறை
8. கையுறை மற்றும் தலைமுடி கவசம் போன்றவற்றை தவறாமல் அணிய வேண்டும்: உணவு பாதுகாப்புத்துறை
9.சிக்கன், பஜ்ஜி, கோபி மஞ்சூரியன் உள்ளிட்ட உணவுகளில் செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது: உணவு பாதுகாப்புத்துறை
10.பரிமாற வாழை இலை அல்லது அனுமதிக்கப்பட்ட பார்ச்மெண்ட் பேப்பர் அலுமினியம் பாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்: உணவு பாதுகாப்புத்துறை
11.FSSAI உரிமை எண்ணுடன் கூடிய முழுமையான லேபிள் விவரங்களை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: உணவு பாதுகாப்புத்துறை
11. உணவு மற்றும் நொறுக்கு தீனிகள் தயாரிக்க அயோடின் கலந்த உப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும்
12. பேக்கரி, உணவகங்களில் உள்ளிட்ட உணவு நிறுவனங்களில் அயோடின் கலக்காத உப்பு பயன்படுத்தக்கூடாது
13. விற்பனையாகாமல் மீதமான உணவுகளை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப்படுத்த வேண்டும்
14.அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் பொருட்களில் உணவுப்பொருட்களை சூடாக பொட்டலமிடக்கூடாது.
வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu