RECENT NEWS

மெக்ஸிகோவில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு

BIG STORIES

அவமானம்... வலி... சபதம்.. நடிகை மிருணாள் தாகூர்.. கார் வாங்கியதில் இப்படியொரு ஃப்ளாஷ்பேக்கா?!

May 23, 2025 01:57 PM

276

அவமானம்... வலி... சபதம்.. நடிகை மிருணாள் தாகூர்.. கார் வாங்கியதில் இப்படியொரு ஃப்ளாஷ்பேக்கா?!

அவமானம்... வலி... சபதம்.. நடிகை மிருணாள் தாகூர்.. கார் வாங்கியதில் இப்படியொரு ஃப்ளாஷ்பேக்கா?!

ஒரு நடிகை அதுவும் பாலிவுட் நடிகை கார் வாங்குவது என்பது சாதாரண செய்திதான். ஆனால், அவர் கார் வாங்கியதற்கு பின்னால் இருக்கு வலி... வேதனை... அம்மாவுக்கு செய்துகொடுத்த சத்தியம்... என வலிமை நிறைந்த பின்னணியை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் மராத்திய தம்பதியருக்கு மகளாய் பிறந்தவர், மிருணாள் தாகூர். கல்லூரியில் படிக்கும்போதே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிக்க ஆரம்பித்தவர், நடிப்பிற்காக கல்லூரியிலிருந்து பாதிலேயே வெளியேறிவர் என கூறப்படுகிறது.

ஹலோ நந்தன், விட்டிதண்டு என மராத்தியில் ஆரம்பித்து, Ghost story, தூஃபான் பாலிவுட்டில் வலம் வந்ததோடு, தெலுங்கில் வெளியான ‘சீதாராம்’ திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்தவர். இதனைத் தொடர்ந்து ‘ஹாய் நான்னா’, ‘ஃபேமிலி ஸ்டார்’ என்ற தெலுங்குப் படத்திலும் நடித்திருந்தார்.

இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளுக்குள் அடங்கிவிடாமல் மலையாளம், பஞ்சாபி உட்பட பல்வேறு மொழிகளிலும் நடிக்க விரும்புவதாகவும் தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். பிரெஞ்சு, ஸ்பானிஷ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தால் கூட அதனை ஏற்று நடிப்பேன் எனவும் கூறியிருந்தார்.

இப்படி, அடுத்தடுத்து படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் சூழலில்தான், அவர் வாங்கிய கார் அவர் பேசியது தற்போது வைரல் ஆக ஆரம்பித்துள்ளது.

அதாவது, மிருணாள் தாக்கூரின் தாயிற்கு தனது உறவினரின் காரில் அமர இருக்கை மறுக்கப்பட்டிருக்கிறது. இது, மிருணாள் தாக்கூரை மிகவும் பாதித்திருக்கிறது.

சுயமரியாதையை சீண்டிப்பார்க்கும் நிகழ்வாக நினைத்த மிருணாள் தாக்கூர், தனது தாய்க்கு ஏற்பட்ட அவமானத்தை மீட்டெடுக்கவேண்டும் என நினைத்துள்ளார்.
கிட்டத்தட்ட சபதம் ஏற்றுள்ளார், என்றுதான் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப்பிறகு, தனது தாயாருக்கு மெர்சிடிஸ் காரை பரிசாக அளித்ததன் மூலம் அந்த சபதத்தை நிறைவேற்றியுள்ளார், மிருணாள் தாக்கூர்.

தற்போது, கார் வாங்கிக் கொடுத்ததன் மூலம், கடந்த கால வேதனையான அந்த தருணத்தை மகிழ்ச்சியாக மாற்றியதாக உணர்ந்திருக்கிறார், மிருணாள் தாக்கூர்.

“அம்மா நீ கொஞ்சம் பொறுத்திரு... உனக்காக ஒரு காரை வாங்கப்போகிறேன். இது வெறும் காரோ உடமையோ அல்ல. கண்ணியத்தை மீட்டெடுக்கும் விஷயம்” என கூறியதோடு, அதை நிறைவேற்ற நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார், நடிகை மிருணாள் தாக்கூர்.

அதுவும், நடுத்தர குடும்பத்தில் பிறந்து, வறுமை சூழல்களை எல்லாம் சந்தித்து, நடிகையான பிறகு வாங்கிய கார் குறித்து கூறும்போது ‘நமது குடும்பத்தில் மெர்சிடிஸ் காரை வைத்திருக்கும் முதல் பெண் நான்தான்," எனவும் பெருமையோடு கூறியுள்ளார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

குளு குளு மின்சார ரெயில் பயணித்தவர்கள் கூறும் குறைகளும்.. நிறைகளும்..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies