இந்தியா
"ஏப்ரல் 22 சம்பவத்திற்கு 22 நிமிடங்களில் பதிலடி" - பிரதமர் மோடி அதிரடி
May 22, 2025 01:03 PM
209
பிரதமர் மோடி அதிரடி
ஏப்ரல் 22ஆம் தேதி பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மே 7ஆம் தேதியன்று 22 நிமிடங்களிலேயே உரிய பதிலடி கொடுத்து பழிதீர்க்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் பிக்கானீரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தானின் ராணுவமும், பொருளாதாரமும் உரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தார்.
பிக்கானீரின் நம் விமான நிலையத்தை பாகிஸ்தான் தாக்க முயன்ற நிலையில், அந்நாட்டின் ரஹிம் யார் கான் விமானப்படைத் தளத்தை இந்தியா தாக்கி அழித்ததாகவும், அது எப்போது செயல்பாட்டிற்கு வரும் என யாருக்குமே தெரியாது என்றும் பிரதமர் கூறினார்.
மேலும், பயங்கரவாதிகளையும், அவர்கள் சார்ந்து இருக்கும் அரசையும் இந்தியா ஒருபோதும் வேறுபடுத்தி பார்க்காது என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக பிக்கனீர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாடு முழுவதும் 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை காணொலி வாயிலாக பிரதமர் திறந்து வைத்தார்.
இத்திட்டத்தில், பரங்கிமலை, திருவண்ணாமலை, விருத்தாசலம் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்களும் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டன
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu