RECENT NEWS

RAT தான் விபத்துக்குக் காரணமா?.. கோணம் மாற.. காட்சியும் மாறுது..

முகப்பு

கொதிக்கும் எண்ணையால் வெந்து போன சிறுவன்.. உதவி கேட்டு தாய் உருக்கம்..!

May 21, 2025 01:35 AM

1588

கொதிக்கும் எண்ணையால் வெந்து போன சிறுவன்.. உதவி கேட்டு தாய் உருக்கம்..!

கொதிக்கும் எண்ணையால் வெந்து போன சிறுவன்.. உதவி கேட்டு தாய் உருக்கம்..!

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே கொதிக்கும் எண்ணெய் கொட்டியதில் உடல் முழுவதும் வெந்து போய் சிகிச்சை பெற்று வரும் தனது 4 வயது மகனின் சிகிச்சைக்கு உதவுமாறு தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்..

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள ஜரினாக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்தனா . ஓட்டுனராக இருந்த இவரது கணவர் இம்மானுவேல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார் . இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கணவன் இறந்த பின்னர் இரு குழந்தைகளையும் கீர்த்தனா கூலி வேலைக்கு சென்று காப்பாற்றி வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று கீர்த்தனா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. அப்போது “அம்மா பசிக்கின்றது..” என்று ஓடிவந்த 4 வயது மகன் பிளஸ்வீனை, தனது மடியில் தூக்கி வைத்துக் கொண்டு கீர்த்தனா சமையல் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது சிறுவன் பிளஸ்வீன் , அடுப்பில் இருந்த எண்ணெயை சட்டியை விளையாட்டு தனமாக பிடித்து இழுத்து விட்டதாக தெரிகிறது. இதில் கொதிக்கும் எண்ணைய் கொட்டியதில் சிறுவன் பிளஸ் வீன்னின் முகம் மற்றும் உடல் முழுவதும் வெந்து படுகாயம் அடைந்தான்.

பலத்த காயம் அடைந்த தனது மகனை தூக்கி கொண்டு கீர்த்தனாவும் , உறவினர்களும் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான் சிறுவன்.

இங்கு மருத்துவர்கள் வர தாமதமானதால் , உறவினர்கள் அறிவுறுத்தலின் பேரில் சிறுவனை தூக்கிக்கொண்டு சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள ராமலிங்கம் என்ற தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அங்கு சிறுவனின் சிகிச்சைகாக தினமும் 35 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு வருவதாகவும், இந்த தொகையை தங்களால் கட்ட முடியாமல் அவதியுறுவதாகவும் தெரிவித்த கீர்த்தனாவும் அவரது உறவினர்களும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் உதவி கேட்டு வருகின்றனர். இன்னும் 10 அல்லது 15 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. மேலும் மூன்று லட்சம் ரூபாய் வரை செலவாகும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளதாகவும், தமிழக அரசின் உதவியை எதிர் நோக்கி காத்திருப்பதாகவும் சிறுவனின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மிரட்டல் அலப்பறை.. அரசு பேருந்து ஓட்டுநர்  வசமாக சிக்கியது எப்படி..? சிசிடிவி காட்சிகள் வெளியானது

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies