பெண் ஐ.டி ஊழியர் மர்ம மரணம் - தற்கொலையா? கொலையா?
Jun 06, 2025
முகப்பு
அடங்க மறுத்து.... அத்துமீறிய சிறுத்தை... திமிறி எழுந்து திருப்பி அடித்த மாணவன்; CCTV
May 18, 2025 08:20 AM
738
அடங்க மறுத்து....அத்துமீறிய சிறுத்தைகள் திருப்பி அடித்த மாணவன்; அடுத்து நடந்த பரபரப்பு!
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே கூவத்தூர் அடுத்த தண்டரை கிராமத்தை சேர்ந்தவர், 20 வயது முரளிதரன். இவர், அரசு கலைக்கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வருகிறார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், தங்கள் வீட்டு பவர் டில்லர் மற்றும் டிராக்டருக்கு டீசல் வாங்குவதற்காக கிழக்கு கடற்கரை சாலை காத்தான்கடையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளார்.
அப்போது, அங்கு எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் திடீரென வந்த கூவத்தூர் நாவாக்கல் பகுதியைச் சேர்ந்த் 33 வயது ரகு, 35 வயது ரஞ்சித் ஆகியோர் முரளிதரன் மீது மோதுவது போல் பைக்கை ஓட்டி வந்துள்ளனர். அதுகுறித்து, அவர்களிடம் முரளிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த ரகு, ரஞ்சித் ஆகியோர் “எங்க ஏரியாவில் வந்து எங்களையே திட்டுகிறாயா?” எனக்கூறி, முரளிதரனை தாக்க ஆரம்பித்துள்ளனர். அடங்கமறுத்து, அத்துமீறியவர்களிடம் பொறு பொறுத்துப்பார்த்த கல்லூரி மாணவர் முரளிதரன், திமிறியெழுந்து இரண்டுபேரையும் திருப்பி அடிக்க ஆரம்பித்தார். இதனால், இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். திருப்பி அடித்த கல்லூரி மாணவனின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாத, ரகுவும் ரஞ்சித்தும் நண்பர்களுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து, வந்த இவர்களது நண்பர்கள் இரண்டு பேர் என கூட்டு சேர்ந்து மொத்தம் நான்கு பேர், கல்லூரி மாணவனின் டி ஷர்ட்டை கிழித்து, அடித்து சரமாரியாக தாக்கும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நான்கு பேரும் அந்த மாணவரை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இந்த தாக்குதலில் கண், முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த முரளிதரன், கூவத்தூர் காவல் நிலையத்தில், தன் தந்தையுடன் சென்று புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, பெட்ரோல் பங்கில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான தாக்குதல் சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டு கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்த போலீஸார், கூவத்தூர் நாவாக்கால் பகுதியைச் சேர்ந்த விசிக பிரமுகர் ரகு, ரஞ்சித், தட்சணாமூர்த்தி, ராஜேஷ் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu