தமிழ்நாடு
என்ன இது டுபாக்கூரா இருக்கு’ ?டம்மி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சீல்..! சாலைவிபத்தில் கல்லா கட்டிய கொடுமை
Jun 05, 2025 03:38 AM
187
என்ன இது டுபாக்கூரா இருக்கு’ ?டம்மி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சீல்..!
கும்மிடிப்பூண்டி அருகே அடிப்படை வசதிகள் ஏதுமின்றி காலாவதியான மருந்துகளுடன் செயல்படுவதாக புகாருக்குள்ளான டுப்பாக்கூர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்
இது தாங்க பல்வேறு சிகிச்சை அளிக்கப்படும் என்று நோயாளிகளின் உயிரோடு விளையாடிய புகாருக்குள்ளான டுப்பாக்கூர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை..!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தலக்குப்பம் பகுதியில் ஆல்பா மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்ற பெயரில் 24 மணி நேரமும் தனியார் கிளினிக் ஒன்று இயங்கி வந்தது. இந்த கிளினிக்கில் சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை என்றும் இங்கு வரும் நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகளை கொடுத்து உடல் நலத்தை மேலும் கெடுத்து விடுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் குழுவினர், அந்த ஆளில்லா ஆல்பா தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அது ஒரு டம்மி மருத்துவமனை என்பதை தெரிந்து கொண்ட பெண் அதிகாரி, “என்னய்யா எல்லாமே டுப்பாக்கூராக உள்ளது” என்று கேள்வி எழுப்பினார்
மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர் ஒருவர் பணியில் இருந்தது போல போலி வருகை பதிவேட்டை ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் காண்பித்தார், எந்த ஒரு மருத்துவரும் அதிக பட்சமாக இப்படி தொடர்ச்சியாக பணியில் இருந்திருக்க முடியாது, பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுப்பா என்று அந்த மருத்துவரின் விளக்கத்தை ஏற்க மறுத்தனர்’
அங்கிருந்த மருத்துவம் பயிலாத பெண் பணியாளரிடம், “ நீ மயங்கி விழுந்தால் உங்க டாக்டர் உன்னை காப்பாற்றுவாரா ? என கேள்வி எழுப்பினார் பெண் அதிகாரி , அதற்கு அவர் பதில் சொல்ல இயலாமல் தவித்து நின்றார் அந்த பெண்மணி
சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் ஆல்பா மருத்துவமனை என்றும் அதற்கு கீழ் மெரிடியன் மருத்துவமனை என்றும் இரு பெயர்கள் இடம் பெற்று இருந்தன. இது குறித்து விசாரித்த போது கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை அப்படியே ஆம்புலன்ஸில் ஏற்றி சென்னையில் உள்ள மெரிடியன் என்ற தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அதன் மூலம் ஆதாயம் பெற்று வந்ததாக கூறப்படுகின்றது. அது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அங்குள்ள மருந்தகத்தில் ஆய்வு செய்த போது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படாமல், காலாவதியான மருந்துகள் வழங்கப்பட்டு வந்ததும் உறுதியானது. இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆல்பா மருத்துவமனையின் ஷட்டர்களை இழுத்து பூட்டி சீல் வைத்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!
Jun 22, 2025
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu