BIG STORIES
டிரோன் யுத்தத்தில் பாகிஸ்தானுக்கு 3 வது நாளாக மரண அடி
May 10, 2025 02:49 AM
761
டிரோன் யுத்தத்தில் பாகிஸ்தானுக்கு 3 வது நாளாக மரண அடி
இந்தியாவின் 20 முக்கிய நகரங்களைக் குறிவைத்து 26 இடங்களில் டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல்கள் நடுவானிலேயே இந்திய ராணுவத்தால் வழிமறித்து முறியடிக்கப்பட்டன.
பகல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகளை இந்தியா தாக்கி அழித்தது.
இதனால் ஆத்திரமுற்ற பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
வியாழக்கிழமை இரவு சுமார் 300 முதல் 400 டிரோன்களை செலுத்தி பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் சுதர்சன் சக்கரா என்ற இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு மற்றும் அதி நவீன ஏவுகணைகளால் முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் பாகிஸ்தான் டிரோன்களை ஏவியது. ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரை எல்லையோரம் 14 நகரங்களில் உள்ள 26 இடங்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.
ஜம்மு, ஸ்ரீநகர் அமிர்தசரஸ், கட்ச், போன்ற இடங்களை குறிவைத்து ஏவப்பட்ட டிரோன்களை வெற்றிகரமாக நடுவானிலேயே வழிமறித்து இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
விமான நிலையங்கள், மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் டிரோன்களை இந்திய படையினர் தீவிரமாக எதிர்கொண்டு தாக்கி அழித்தனர்.
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்புரில் சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனின் உதிரி பாகங்கள் எரிந்த நிலையில் ஒரு கார் மீது விழுந்ததில் 3 பேர் காயம் அடைந்தனர்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லையோரம் அமைந்துள்ள பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அபாய சைரன்கள் ஒலித்தன
ஜம்மு காஷ்மீரின் அவந்திபோரா விமானப்படைத்தளத்தை குறிவைத்து ஆயுதங்களுடன் ஏவப்பட்ட டிரோன் ஒன்று கடுமையான முயற்சிக்குப் பிறகு சுட்டு வீழ்த்தப்பட்டது.
அப்போது 15 இடங்களில் வெடிச்சத்தம் கேட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். பாகிஸ்தான் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலால் எல்லையோர நகரங்களில் வசிக்கும் மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடாமல் வீடுகளில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu