RECENT NEWS

இதுவரை பார்த்தது திராவிட மாடலின்  பார்ட் 1 தான்; 2026ல் Version 2.0 loading - முதலமைச்சர்

இதுவரை பார்த்தது திராவிட மாடலின் பார்ட் 1 தான்; 2026ல் Version 2.0 loading - முதலமைச்சர்

Apr 29, 2025

இதுவரை பார்த்தது திராவிட மாடலின்  பார்ட் 1 தான்; 2026ல் Version 2.0 loading - முதலமைச்சர்

இதுவரை பார்த்தது திராவிட மாடலின் பார்ட் 1 தான்; 2026ல் Version 2.0 loading - முதலமைச்சர்

Apr 29, 2025

முகப்பு

6 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட ரயில்நிலையம்... உலகத்திலேயே முதன்முறையாக...!

Apr 11, 2025 04:32 PM

721

6 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட ரயில்நிலையம்... உலகத்திலேயே முதன்முறையாக...!

6 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட ரயில்நிலையம்... உலகத்திலேயே முதன்முறையாக...!

பல ஊர்களுக்கு ரயிலில் பயணம் செய்வதற்கே 6 மணி நேரம் போதாது. ஆனால், 6 மணிநேரத்திற்குள் ஒரு ரயில்நிலையத்தையே கட்டிமுடித்துவிட்டார்கள் என்றால், நம்பமுடிகிறதா? உலகத்திலேயே முதன்முறையாக, எப்படி? எங்கு கட்டி முடிக்கப்பட்டது என விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

ஜப்பான் அரிடா நகரில் அமைந்துள்ள ஹட்சுஷிமா எனும் இந்த ரயில் நிலையம் 1948 ஆம் ஆண்டு கட்டுமுடிக்கப்பட்டது. இயற்கை பேரிடர்களாலும்... ஆண்டுகள் பல ஆகிவிட்டதாலும் ரயில் நிலையம் சிதிலமடைந்து காணப்பட்டுள்ளது. இதனால், இந்த ரயில் நிலையத்தை 3D பிரிண்ட் ரயில் நிலையமாக மாற்ற முடிவு செய்தனர்.

இதன் அடிப்படையில், ஜப்பானிலுள்ள முக்கிய ரயில்வே நிறுவனமான மேற்கு ஜப்பான் ரயில்வே நிறுவனத்தை, தேர்வு செய்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, செரண்டிக்ஸ் நிறுவனம் 3D பாகங்கள் தீவான க்யூஷிவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்திலுள்ள ஒரு தொழிற்சாலையில் அச்சிட்டு, சுமார் 804 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஹட்சுஷிமா ரயில் நிலையத்திற்கு கொண்டுவந்துள்ளார்கள்.

அதன்பிறகு, ஆறு மணி நேரத்திற்கு குறைவான, நேரத்திலேயே ஒரு சிறப்பு மோட்டாரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அச்சு பாகங்களை ஒன்றிணைத்துள்ளார்கள். பிறகு, ஒரு பெரிய கிரேன் உதவியுடன் 100 சதுர அடிக்கும் சன்று அதிகம் கொண்ட புதிய ரயில் நிலையம், அதிகாலை 5:45 மணிக்கு முதல் ரயில் வருவதற்கு முன்பே கட்டிமுடிக்கப்பட்டது, என்பதுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

உள்புற வேலைகளான டிக்கெட் எந்திரங்கள், போக்குவரத்து அட்டை வாசகங்கள், அச்சடிப்பதற்கு தேவையான உபகரணங்கள் மட்டுமே தேவைப்பட்டுள்ளன. இதனால், ஜூலை மாதத்தில் திறக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என ஜப்பான் ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளதாக, கூறப்படுகிறது.

ஜப்பானில் குறைந்துவரும் மக்கள் தொகைக் காரணமாக போதிய பணியாளர்கள் கிடைப்பதில்லை. அதற்கு மாற்றாகவே எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரயில் நிலையமும் குறைவான பணியாளர்களுடன் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ரயிலு ஸ்பீடா போயி பார்த்திருக்கோம். ஆனா, ரயில் நிலையம் இவ்ளோ ஸ்பீடா கட்டப்பட்டத்தை இப்பதை கேள்விப்படுறோம். ஆனாலும், ரயில் நிலையத்துக்கு இவ்ளோ ஸ்பீடுங்கிறது, நினைச்சுக்கூட பார்க்கமுடியல.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

இன்னோவா அரக்கன்.. தூங்கு மூஞ்சி ஓட்டுனர்.. குடும்பமே பலியான சோகம்..! ஓட்டுனர்கள் இதை செய்யாதீங்க

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies