முகப்பு
தம்பியை விடுவிக்க கோரி காவல்நிலையம் முன்பு விஷம் குடித்த சகோதரிகள்..! இன்ஸ்பெக்டர் தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு...
Apr 09, 2025 10:36 AM
144
தம்பியை விடுவிக்க கோரி காவல்நிலையம் முன்பு விஷம் குடித்த சகோதரிகள்..! இன்ஸ்பெக்டர் தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு...
தம்பி மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை நீக்கக்கோரியும், அவரை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரியும் தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி காவல் நிலையம் சென்ற இரண்டு சகோதரிகளை இன்ஸ்பெக்டர் ஷர்மிளா சாதி பெயரை சொல்லை தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தியதாக கூறி காவல் நிலைய வாசலிலேயே இரண்டு பேரும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனர்.
இதில் கிருத்திகா என்பவர் உயிரிழந்த நிலையில் மேனகா என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது தம்பி மீது போடப்பட்டுள்ள பொய்யான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என தற்கொலைக்கு முயன்ற மேனகா வலியுறுத்தியுள்ளார்.
விஷம் குடித்த கீர்த்திகா உயிரிழந்ததை அறிந்த உறவினர்கள் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு திரண்டுள்ளனர்.
இன்ஸ்பெக்டர் சர்மிளாதான் கிருத்திகாவின் மரணத்திற்குக் காரணம் எனவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மருத்துவமனை வாசலில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தினேஷ் மீது கொலை முயற்சி, மணல் கடத்தல், உள்பட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் தஞ்சை, திருவாருர் மாவட்டங்களில் உள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu