பாஜக கட்டுப்பாட்டுடன் கூடிய நேர்மையான கட்சி - அண்ணாமலை

0 1159
பாஜக கட்டுப்பாட்டுடன் கூடிய நேர்மையான கட்சி - அண்ணாமலை

பாஜக கட்டுப்பாட்டுடன் கூடிய நேர்மையான கட்சி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நேற்று இரண்டாவது கட்ட நடை பயண பிரச்சார பயணத்தை அண்ணாமலை துவக்கினார்.

அங்கிருந்து பொட்டல்புதூர், கடையம், கீழப்புலியூர் வழியாக சுமார் 3 மணி நேரம் நடந்து தென்காசி புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தார். பின்னர் பேசிய அவர், இரவு 10 மணிக்கு மேல மைக்கில் பேசுவதற்கு அனுமதி இல்லை என்றும் அதற்கு மேல் பேசும் பொழுது அது குற்றமாகிவிடும் என்றும் கூறினார்.

தென்காசியில் சேர்ந்திருக்கக்கூடிய கூட்டம் என்பது ஒரு சரித்திர கூட்டம் என்று கூறிய அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடி மீது நீங்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையை இந்த கூட்டம் விளக்குகிறது என்றார். கண்டிப்பாக இந்த மாதம் முடிவதற்குள் பாதயாத்திரையில் ஒரு நாள் விடுப்பு எடுத்து இந்த தென்காசியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து அதில் தாம் விரிவாக பேசுகிறேன் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments