20க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புள்ள ரவுடி வெட்டிக் கொலை..!

0 1897

சேலத்தில் ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் அவரின் இரு பழைய நண்பர்களைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. 

இந்நிலையில், மாசிநாயக்கன்பட்டியில் இருந்த நிலையில் மாயமான ரஞ்சித்தின் உடல் உடையார்பட்டி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வரும் நிலையில், கொலையாளிகளைக் கண்டுபிடித்த பின்னரே ரஞ்சித்தின் உடலைப் பெற்றுக் கொள்வதாக அவரின் 2வது மனைவி கூறியதைத் தொடர்ந்து, உடற்கூறாய்வு முடிந்த நிலையிலும் சடலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஞ்சித் கொலை தொடர்பாக அவரின் பழைய நண்பர்கள் இருவரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments