பஞ்சாப் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழக வீரர்களுக்கு இறுதி மரியாதை.. உடல் தகனம்

0 1715

பஞ்சாப் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்களின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

கடந்த 12ம் தேதி பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சேலம் மாவட்டம் பனங்காடு பகுதியைச் சேர்ந்த கமலேஷ் என்பவரும், தேனி மாவட்டம் முனாண்பட்டி கிராமத்தைச் சேர்ந்த யோகேஷ் குமார் என்பவரும் உயிரிழந்தனர். இருவரது உடலும் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இராணுவ மரியாதையுடன் வீரர்களின் உடலை அடக்கம் செய்யக்கோரி, இருவரது உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின் அவர்கள் போராட்டத்தை கைவிட்ட நிலையில், வீரர் யோகேஷ்குமாரின் உடல் முனாண்பட்டி கிராமத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. வீரர் கமலேஷின் உடலும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments