ட்விட்டர், மெட்டாவை தொடர்ந்து 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ட்விட்டர், மெட்டா, அமேஸான் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் விரைவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான உத்தரவை வெளியிட உள்ளது. இதன்படி, அந்நிறுவனம் தனது புதிய ரேட்டிங் முறையை பயன்படுத்தி ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
செயல்திறன் சரியில்லாத 6 சதவீதம், சுமார் பத்தாயிரம் ஊழியர்களின் பணிநீக்கம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்க உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என கூறப்படுகிறது.
Comments