இந்தியாவில் ஆகஸ்ட் 10க்குள் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை தொடக்கூடும் என ராகுல் காந்தி எச்சரிக்கை

ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் ராகுல் காந்தி எச்சரிக்கை
இந்தியாவில் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தொடக்கூடும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி இன்று வெளியிட்ட பதிவில், நாட்டில் கொரோனா பாதிப்பு இந்த வாரம் 10 லட்சத்தை தாண்டும் என கடந்த 14ம் தேதி தாம் பதிவிட்டிருந்ததாகவும், அதேபோல் தற்போது 10 லட்சத்தை கடந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இதே வேகத்தில் கொரோனா தொற்று பரவல் இருந்தால், ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் இந்தியாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுவர் எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். ஆதலால் கொரோனா தொற்று பரவலை தடுக்க உறுதியான திட்டத்தை வகுத்து அரசு செயல்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Comments