BIG STORIES
“செல்ஃபி எடுக்கலாம் வா”.. ஆற்றில் நீந்தி உயிர் தப்பிய கணவர்.. விசாரணையில் திடீர் ட்விஸ்ட்!
Jul 13, 2025 03:06 PM
227
“செல்ஃபி எடுக்கலாம் வா”.. ஆற்றில் நீந்தி உயிர் தப்பிய கணவர்.. விசாரணையில் திடீர் ட்விஸ்ட்!
”செல்ஃபி எடுக்கலாம் வா” என கணவரை அழைத்து சென்ற மனைவி, ஆற்றில் தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாத்தப்பா. அவர் தனது மனைவி சின்னியுடன் தெலங்கானா மாநிலம் கடலூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். சம்பவத்தன்று, அக்கிராமத்தில் உள்ள கிருஷ்ணா ஆற்றினை வேடிக்கை பார்க்க கணவன் மனைவி இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். கிருஷ்ணா ஆற்றின் மீது அமைக்கப்பட்ட பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஆற்றின் அழகைக் கண்டு தாத்தப்பாவின் மனைவி செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளார்.
அதையடுத்து, உடனே பைக்கை நிறுத்திய தாத்தாப்பா, பாலத்தின் மீது ஏறி நின்று மனைவியுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரது மனைவி சின்னி, திடீரென தனது கணவர் தாயப்பாவை ஆற்றில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் நீரோட்டத்தில் வேகமாக இழுத்துச் செல்லப்பட்டார் தாத்தாப்பா. அப்போது அதிர்ஷ்டவசமாக ஆற்றின் நடுவே இருந்த பாறையின் மீது ஏறி உயிரைக் காப்பாற்றிக் கொண்ட தாத்தப்பா, காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று சத்தம் போட்டுள்ளார்.
அதை கவனித்த உள்ளூர் மீனவர்கள் கயிறு ஒன்றுடன் ஓடி வந்து அந்த கயிற்றை நதியில் சிக்கிக் கொண்டிருந்த நபரை நோக்கி வீசி அவரை காப்பாற்றிக் கரை சேர்த்தனர். அப்போது மேலே வந்த தாத்தாப்பா, ”தன்னை கொலை செய்யும் நோக்கில் மனைவிதான், ஆற்றில் தள்ளி விட்டதாகக் கூறி ஆவேசமடைந்தார். இதனை கேட்ட அங்கிருந்த ஊர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால் ”தான் அப்படி செய்யவில்லை என்றும், இது தவறுதலாக நடந்த விபத்து" என்றும் கூறி மனைவி விளக்கம் கொடுத்துள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து, என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளூர் மக்கள், இருவரின் குடும்பத்தினருக்கும், தகவல் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், தன்னை கொல்ல திட்டமிட்டு ஆற்றில் தள்ளிவிட்டதாக தனது மனைவி சின்னி மீது தாத்தாப்பா போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தாத்தப்பாவை அவரது மனைவிதான் உண்மையிலேயே ஆற்றில் தள்ளி விட்டாரா? இல்லை தவறுதலாக நடந்த விபத்தை, தாத்தப்பா தவறாக எடுத்துக்கொண்டாரா? என விசாரணை நடத்திவருகின்றனர்.
செல்பி எடுக்கலாம் வா! என்று அழைத்து சென்று கொலை செய்யும் நோக்கில் கிருஷ்ணா ஆற்றில் தள்ளிவிட்டதாகக் கூறி, மனைவி மீது கணவர் புகார் கொடுத்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu