RECENT NEWS

அப்போ.. லியோ படம் மொத்தமே ரூ.404 கோடி தான் வருமானமா? வருமான வரி தாக்கலால் அம்பலம்..! “கூலி” ஒட்டுமொத்தமாவே ஓவர் டேக்காம்..!

முகப்பு

குடும்பமா? நாடா? வம்பிழுக்கிறாரா கம்பீர் ? கோலிக்கு ஆதரவாக களமிறங்கிய 'சின்ன தல'

Jul 13, 2025 04:35 AM

249

குடும்பமா? நாடா? வம்பிழுக்கிறாரா கம்பீர் ? கோலிக்கு  ஆதரவாக களமிறங்கிய 'சின்ன தல'

விராட் கோலியை வம்பிழுக்கிறாரா கம்பீர்? 'கிங்' கோலிக்கு ஆதரவாக களமிறங்கிய 'சின்ன தல'


இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் மோசமாக தோற்றதன் எதிரொலியாக இந்திய வீரர்களுக்கு, கிரிக்கெட் வாரியம் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.

அதாவது வீரர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது, அவர்களது குடும்பத்தினரோடு குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தங்கியிருக்க முடியும். வெளிநாடுகளில் 45 நாட்களுக்கு மேலான தொடரில் விளையாடினால் 14 நாட்களும், அதற்கு குறைவான நாட்கள் விளையாடினால் ஒரு வாரமும் குடும்ப உறுப்பினர்கள் வீரர்களுடன் தங்க அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி, அதிருப்தி தெரிவித்ததோடு மன நலனுக்கு குடும்ப இருப்பு மிக முக்கியமானது என்ற கருத்தை முன் வைத்தார்.

விராட் கோலியின் அதிருப்தி பற்றி அண்மையில் பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், குடும்பம் என்பது முக்கியமானது தான், ஆனால் நாம் எதற்கு இங்கு வந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது விடுமுறை அல்ல. நீங்கள் ஒரு பெரிய நோக்கத்திற்காக இங்கே இருக்கிறீர்கள். இந்த டிரஸ்ஸிங் ரூமிலோ அல்லது இந்த சுற்றுப்பயணத்திலோ நாட்டைப் பெருமைப்படுத்தும் வாய்ப்பைப் பெறும் நபர்கள் மிகக் குறைவு என்று குறிப்பிட்டார்.

வெளிநாட்டு தொடர்களில் வீரர்களுடன் குடும்பத்தினர் இருக்கக்கூடாது என்று சொல்லமாட்டேன். ஒவ்வொருவருக்கும் குடும்பம் முக்கியமானது. ஆனால் உங்களுடைய கவனம் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதில் மட்டுமே இருக்க வேண்டும். மற்ற விஷயங்களை விட அதுவே உங்களுக்கான மிகப்பெரிய பணி.

உங்களுடைய நாட்டை பெருமையடைய வைக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட வேறு எதுவும் பெரியது கிடையாது. அந்த நோக்கத்தையும் இலக்கையும் தவிர வேறு எந்த விஷயமும் முக்கியமானது கிடையாது என்று தான் நினைப்பதாகவும் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததற்கு கம்பீர் தான் காரணம் என சமூக வலைதளங்களில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் , விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வுக்கு பிறகு விராட் கோலிக்கு நேர் எதிரான கருத்தை கம்பீர் தெரிவித்திருப்பது ரசிகர்கள் இடையே மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், ரசிகர்களால் சின்ன தல என செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு தொடர்களில் வீரர்கள் குடும்பத்தினரோடு இருக்கக்கூடாது என்ற பிசிசிஐ விதியை நான் எதிர்க்கிறேன் என்று குறிப்பிட்ட ரெய்னா, விராட் கோலி களத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவரின் மகள் மைதானத்தில் இருந்து கைதட்டி உற்சாகப்படுத்துவது எவ்வளவு பெருமையான தருணம், அப்போது விராட் கோலி தீயாக செயல்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“டேய் அவ உனக்கு தங்கச்சிடா..” காதலுக்கு எதிர்ப்பால் பயங்கரம்.. தந்தை - சித்தியை கொன்ற மகன்..! சடலங்களை மூட்டை கட்டி ஏரியில் வீச்சு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies