RECENT NEWS

120 சவரன் நகை.. ரூ.20 லட்சம் .. இன்னோவா கார் போதாதாம்..! ரூ.50 லட்சம் கூடுதலா கேட்டு டார்ச்சர்..! பறிபோன ஐடி பெண் ஊழியர் உயிர்

BIG STORIES

கழன்று ஓடிய தலைக்கவசம் தலை நசுங்கி பலியான சோகம்.. பெண் உயிரிழப்புக்கு யார் காரணம்.? சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட போலீசார்

Jul 10, 2025 01:33 AM

310

கழன்று ஓடிய தலைக்கவசம் தலை நசுங்கி பலியான சோகம்.. பெண் உயிரிழப்புக்கு யார் காரணம்.?

சென்னையில், தனது இரு குழந்தைகளை பள்ளியில் கொண்டு விட்டு , ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பிய பெண் மீது சரக்கு வாகனம் உரசியதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த நிலையில், அவரது தலை மீது சரக்கு வாகனத்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவன் பிரிந்து சென்றாலும் தனது இரு குழந்தைகளையும் , வீட்டு வேலை பார்த்து படிக்க வைத்த பெண், சாலை விபத்தில் பலியான தகவல் கேட்டு உறவினர்கள் பதறியபடியே ஓடி வந்த காட்சிகள் தான் இவை..!

 சென்னை புதுப்பேட்டை சேஷகிரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி (வயது 42) இவர் தனது கணவர் டேனியலை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து 10 ஆண்டுகளாக தனது மகன் மற்றும் மகளோடு தனியாக வசித்து வந்தார்

இவரது மகன் ஷாம் பத்தாம் வகுப்பும், மகள் ஷாலினி எட்டாம் வகுப்பும் புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். வீட்டுவேலை செய்து தனது குழந்தைகளையும் பரமாரித்து வந்த ஸ்ரீதேவி, தினந்தோறும் தனது பிள்ளைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பள்ளியில் விட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

புதன்கிழமை காலை 8:30 மணி அளவில் தனது இரு பிள்ளைகளையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு பள்ளியில் விட்டுவிட்டு, சரியாக 8.45 மணி அளவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காவல் ஆணையர் அலுவலகம் சந்திப்பை தாண்டி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த மினி சரக்கு வாகனம் ஒன்று அவர் மீது மோதியது இதில் நிலை தடுமாறி விழுந்த அவரது தலையில் சரக்குவாகன சக்கரம் ஏறி இறங்கியதால் ஸ்ரீதேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உயிரிழந்த ஸ்ரீதேவியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் , செண்ட்ரல் அருகே நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவரது தங்கைகளான சுமிதா ,சங்கீதா ஆகியோர், அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் பணத்தையும், கிடைக்கும் வீட்டு வேலையும் செய்தும் தனது பிள்ளைகளை ஸ்ரீதேவி காத்து வந்தார் அந்த இரு பிள்ளைகளும் நிற்கதியாக தவிப்பதாக கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தார்.

விபத்து ஏற்பட்டு சுமார் 20 நிமிடங்கள் ஸ்ரீதேவி ரத்த வெள்ளத்தில் சாலையிலே கிடந்ததாகவும் ஆம்புலன்ஸ் விரைவாக வந்திருந்தால் ஸ்ரீதேவியை காப்பாத்தி இருக்கலாம் எனவும் ஸ்ரீதேவி உயிரிழப்புக்கு அரசு தான் காரணம் எனவும் தெரிவித்தனர்.

விபத்து நடந்ததை தங்கள் யாரும் பார்க்கவில்லை எனவும் அங்கு என்ன நடந்தது என தங்களுக்கு தெரியாது எனவும் போலீசார் சரியான விசாரணை மேற்கொண்டு அங்கே என்ன நடந்தது என்பதை தெரிவிக்குமாறு தெரிவித்தனர்.

அதே நேரத்தில் விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள பேருந்து நிறுத்ததில் இருந்த பொதுமக்கள் போலீசார் ஹெல்மெட் சோதனையின் போது வாகனத்தை நிறுத்தியதாகவும், அதன் பிறகு ஸ்ரீதேவி அங்கிருந்து புறப்பட்ட போது பின்னால் வந்த வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாகவும், போலீசார் அந்த வாகனத்தைக்கூட பிடிக்கவில்லை என கூறியதாக ஸ்ரீதேவியின் தோழி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்

இந்நிலையில் போலீசார் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர். அதில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தப்படி, ஆனால் தலைக்கவசத்துடன் இருக்கும் கழுத்துப்பட்டையை இணைக்காமல் ஸ்ரீதேவி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அவருக்கு பின்னால் வந்த சரக்கு வாகனம் முந்திச்செல்ல முயன்று லேசாக உரச நிலைத்தடுமாறி விழுந்த ஸ்ரீதேவியின் தலையில் இருந்து ஹெல்மெட் தனியாக கழன்று ஓடியது , இதனால் அந்த சரக்கு வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளது தெரியவந்தது.

மேலும் போலீசார் வாகன சோதனையால் ஸ்ரீதேவி விபத்தில் சிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.
விபத்து ஏற்படுத்திய சரக்கு வாகனம் சென்டரல் அருகே நிறுத்திவிட்டு ஓட்டுனர் சூர்யா மட்டும் ஓடிவிட்டதாகவும், திருவள்ளூரில் இருந்து லோடு ஏற்றி கொண்டு பிராட்வே செல்லும் போது விபத்து ஏற்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள சரக்குவாகன ஓட்டுனர் சூர்யாவை தேடி வருவதாகவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தால் தாயை இழந்த பிள்ளைகளின் படிப்பும், எதிர்காலமும் கேள்விக்குறி ஆகிவிட்டதாக உறவினர்களின் கதறி அழுதது அனைவரையும் கலங்கசெய்தது. தலைக்கவசத்தை தனது கழுத்து பட்டையுடன் இணைத்திருந்தால் ஒரு வேலை அவர் உயிர் பிழைத்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

120 சவரன் நகை.. ரூ.20 லட்சம் .. இன்னோவா கார் போதாதாம்..! ரூ.50 லட்சம் கூடுதலா கேட்டு டார்ச்சர்..! பறிபோன ஐடி பெண் ஊழியர் உயிர்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies