RECENT NEWS

மதுபோதையில் தாறுமாறாக  லாரியை ஓட்டி மோதிய விபத்தில் ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்..!

BIG STORIES

"ஒழுங்கா இல்லைனா வேற மாதிரி ஆகிரும்" எஸ்.பியின் மிரட்டலால் அதிர்ச்சி.. "உங்க அராஜகம்..அடிச்சு கொல்லுவீங்க..

Jul 03, 2025 02:17 PM

147

"ஒழுங்கா இல்லைனா வேற மாதிரி ஆகிரும்" எஸ்.பியின் மிரட்டலால் அதிர்ச்சி.. "உங்க அராஜகம்..அடிச்சு கொல்லுவீங்க..

"ஒழுங்கா இல்லைனா வேற மாதிரி ஆகிரும்" எஸ்.பியின் மிரட்டலால் அதிர்ச்சி.. "உங்க அராஜகம்..அடிச்சு கொல்லுவீங்க..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் கோகுலேஸ் என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 பேர் உடற்கருகி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் அரசு மருத்துவமனையில் காயத்தோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வலியுறுத்தி இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் இணைந்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

அப்போது பாதுகாப்பிற்காக வந்த போலீசார் மருத்துவமனையின் கதவை மூடியிருந்த நிலையில், போராட்டக்காரர்கள் கதவை திறந்துவிடுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கதவை திறந்து கொண்டு சாலையில் போராட்டம் செய்தனர்.

தகவல் அறிந்து வந்த விருதுநகர் மாவட்ட எஸ்.பி. கண்ணன் இறந்தவர்களின் உறவினர்களிடம் கூட்டத்தை கலைந்து செல்லுமாறு தெரிவித்தார். அப்போது ஒரு கட்டத்தில் ஒலிபெருக்கியை வாங்கிய எஸ்.பி. கண்ணன், " ஒழுங்கா இருக்கணும், இதுக்கு மேல ஆளுக்காளு கோஷம் போட்டீங்கனா, அப்புறம் வேற மாதிரி ஆகிரும்" என மிரட்டும் தொனியில் பேசினார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த, இறந்தவர்களின் குடும்பத்தினர், "துப்பாக்கி வச்சு சுடுவீங்க, உங்க அராஜகம், ஜெயில்ல வச்சு கொல்லுவீங்க" என எஸ்.பியிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர், "நீங்க செத்தா அஞ்சு லட்சம் வாங்கிட்டு போவீங்களா?" என எஸ்.பியை நோக்கி கேள்வி எழுப்ப, உடனே அந்த இடம் பரபரப்பாக மாறியது.

பின்னர் காவல் துறையினரை பின்னால் வருமாறு, அங்கிருந்த காவலர்களுக்கு மாவட்ட எஸ்.பி. கண்ணன் உத்தரவிட்டார்.

இதுவரை 5 பேரின் உடலை அவர்களது உறவினர்கள் பெற்றுள்ள நிலையில் 4 பேரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“கனவிலும் யாரோ தூக்கிக்கிட்டு போற மாதிரியே இருக்கு”-அலறி துடிக்கும் சிறுமி.. ! அதிரவைத்த தாயின் புதிய வாக்குமூலம்!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies