BIG STORIES
மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் விபரீதம்.. சிறுமி பலியான சோகம்..!.. பெற்றோர்களே உஷார்
May 25, 2025 01:37 AM
464
மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் விபரீதம்.. சிறுமி பலியான சோகம்..!.. பெற்றோர்களே உஷார்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் தெருவில் விளையாடிய சிறுமி மின்சாரம் தாக்கி பலியானதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோரம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மனைவி இலக்கியா. இவர்களுக்கு ஜெனிமித்ரா ராணி என்ற 5 வயது மகள் இருந்தார்.
சிறுமி ஜெனிமித்ரா தாய் இலக்கியாவின் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரியில் உள்ள தாத்தா முருகன் வீட்டில் தங்கி இருந்து அருகில் உள்ள பள்ளியில் எல் கே ஜி படித்து வந்தார்.
தற்போது அங்கு தென் மேற்கு பருவமழை துவங்கிய நிலையில் காற்று பலமாக வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சனிக்கிழமை அதிகாலை வயல் வெளியில் அண்மையில் நடப்பட்ட மின்கம்பம் ஒன்று சாய்ந்து விழுந்து உள்ளது .
இதனால், வயலுக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் முருகன் என்பவர் வீடு அருகே உள்ள இரும்பு மின்கம்பத்தில் மின் கம்பி உரசி மின்சாரம் பாய்ந்துள்ளது.
இது தெரியாமல் முருகன் வீட்டருக்கே சிறுமி ஜெனிமித்ரா மற்றும் அவரது தோழி பிரிதிஷா ஆகியோர் விளையாடி கொண்டிருந்துள்ளனர் .
அப்போது எதிர்பாராத விதமாக அந்த இரும்பு மின்கம்பத்தை பிடித்து சுற்றி விளையாட முயன்ற போது, மின்சாரம் பாய்ந்து சிறுமி ஜெனிமித்ரா ராணி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மற்றொரு சிறுமி பிரிதிஷா பலத்த காயம் அடைந்தார். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து ஊத்துமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
ஏற்கனவே வயலில் உள்ள மின்கம்பம் சேதசமடைந்ததாக 13 நாட்களுக்கு முன்பு தான் மின் வாரியத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் சாய்ந்த மின்கம்பத்தை, மின்வாரிய ஊழியர்கள் பெயரவிற்கு குழி தோண்டி நட்டு சென்றதாக கூறப்படுகிறது.
மின் வாரியத்தின் அலட்சியத்தால் மின்கம்பம் சாய்ந்து இந்த விபத்து நடைபெற்றதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ள இச்சூழலில் தெருக்களில் விளையாடச் செல்லும் தங்கள் பிள்ளைகளை பெற்றோர் கவனிக்க வேண்டியது அவசியம். கூடுமானவரை தெருவில் இருந்தாலும் சரி, பூங்காக்களில் இருந்தாலும் சரி மின்கம்பங்களை தொடாமல் விளையாடுவது பாதுகாப்பானது.
மின்வாரியத்தில் உள்ள சிலரது அலட்சியத்தால் இதுபோன்ற விபரீத விபத்துகளில் சிக்கி சிறார்கள் உயிரிழக்க நேர்வதாக அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu